Pages

Search This Blog

Showing posts with label Bramman. Show all posts
Showing posts with label Bramman. Show all posts

Tuesday, January 8, 2019

பிரம்மன் - ஓடு ஓடு ஓடு ஓடு

ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ நடந்த இடம் சேரும் வரை நிக்காமலே ஓடு
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
உன் கண்ணுக்குள்ளே கனவு எல்லாம் எங்கிருக்கு தேடு
ஏ நிக்காம ஓடினா தூரம் தான் இல்லையே
எப்போதும் ஓடினா வானம் தான் எல்லையே
ஓயாம ஓடிவிடு உன்ன நீ தேடிஎடு
உனக்கில்லை என்றும் தான் ஈடு
வாழ்க்க சினிமா தாண்டா அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே எந்த நாலு பேரும் நண்பந்தாண்டா

ஏ ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
நீ பள்ளம் மேடு பாத்திடாம பாஞ்சு பாஞ்சு ஓடு
ஏ தேடு தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
நீ எட்டு மேலே எட்டு வச்சு எட்டாதத தேடு
நிக்காம ஓடுதே நம்மோட பூமியே
எப்போதும் ஓடியே நீதானே விந்தையே
நில்லென்று சொன்னாலும் நில்லாது நில்லாது உன்னோட காலம்
வாழ்க்க சினிமா தாண்டா அதில் ஹீரோ என்றும் நீயே தான்டா
விளையாடி கொண்டாடவே அந்த நாலு பேரும் நண்பந்தாண்டா



Bramman - Vodu Vodu

பிரம்மன் - வானத்துல நிலவிருக்கும் தோட்டத்துல

யாரோ யாரோ யாரிவளோ தேவதையோ
அழகால் என்னை கொன்னவள் தான் ராட்சசியோ

ஏ வானத்துல நிலவிருக்கும் தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
ஏ காட்டுக்குள்ள மான் இருக்கும் கடலுக்குள்ள மீனிருக்கும்
ரெண்டும் சேர்ந்த கண்ணு ரெண்ட பாத்தேனே பாத்தேனே
மழைபோல மேகத்தில் இருந்து தரையில தான் குதிச்சேனடி
மனசுக்குள்ள உன் பேர சொல்லி பல முறை தான் ரசிச்சேனடி
கண்ணிருந்தா கனவிருக்கும் நெஞ்சிறுந்தா நினைவிருக்கும்
ரெண்டிலுமே நீ இருப்பாயே
வானத்துல நிலவிருக்கும் தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
ஓ காட்டுக்குள்ள மான் இருக்கும் கடலுக்குள்ள மீனிருக்கும்
ரெண்டும் சேர்ந்த கண்ணு ரெண்ட பாத்தேனே பாத்தேனே

ஏ பெண்ணே உன்னால என் நெஞ்சம் தன்னால
தள்ளாடுதே திண்டாடுதே காத்தாடி போல
ஹே கண்ணே உன்னால என் கண்கள் தன்னால
துண்டாகுதே தூலாகுதே கண்ணாடி போல
உன் கை பட்டு கலைகின்ற கூந்தல் என் கவனத்தை கலைக்குதடி
உன் கை கோர்த்து போகின்ற பாதை என் கண் முன்னே தெரியுதடி
பகல் இருந்தா இரவிருக்கும் இரவிருந்தா பகல் இருக்கும் ரெண்டுலயும் நீ இருப்பாயே
வானத்துல நிலவிருக்கும் தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன பாத்தேனே பாத்தேனே பாத்தேனே

ஏ முள்ளே இல்லாம ஒரு ரோஜா பாத்தேனே
கண்ணால தான் பாத்தி கட்டி தோட்டம் போட்டேனே
ஏ சொல்லே இல்லாம நான் ஊமை ஆனேனே
சொல்லாமலே பின்னால் வந்து காதல் கொண்டேனே
என் நெஞ்சிக்குள் அறை ஒன்று அமைச்சு உன் சிரிப்பெல்லாம் சேர்த்தேனடி
என் நிழலுக்கும் உன் பின்னால் நடக்க நான் கட்டளைகள் விதிப்பேனடி
மூச்சிருந்தா பேச்சிருக்கும் பேச்சிருந்தா மூச்சிருக்கும் ரெண்டுலயும் நீ இருப்பாயே
வானத்துல நிலவிருக்கும் தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
ஓ காட்டுக்குள்ள மான் இருக்கும் கடலுக்குள்ள மீனிருக்கும்
ரெண்டும் சேர்ந்த கண்ணு ரெண்ட பாத்தேனே பாத்தேனே
யாரோ யாரோ யாரிவளோ தேவதையோ
அழகால் என்னை கொன்னவள் தான் ராட்சசியோ



Bramman - Vaanathile

பிரம்மன் - என் உயிரின் உயிராக என் விழியின் ஒளியாக

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
வருவாயா வருவாயா

ஆஹா… ஹா..

என் இரவின் கனவாக
என் நதியின் கரையாக
என் விழியின் துணையாக
வருவாயா வருவாயா

ஆ…
மழை பெய்தால் என்ன
ஆ…
வெயில் கடித்தால் என்ன
ஆ…
கடல் நீலம் மட்டும்
என்றும் சாயம் போகாதே

ஆ…
உன்னை என்னும் நேரம்
ஆ…
இதயத்தின் ஓரம்
ஆ…
அடி ஈரமில்லா சாரல்
ஒன்று வீசுதே

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
நீ வருவாயா வருவாயா

என் இரவின் கனவாக
என் நதியின் கரையாக
என் விழியின் துணையாக
வருவாயா நீ வருவாயா

ஓ.. பஞ்சிலே தாவும் தீயும்
நெஞ்சிலே வாழும் அன்பும்
ஓயுமா அடி ஓயுமா
அது மேலும் மேலும் கூடும் அன்பே

காதலை கண்ணில் கண்ட
கடவுளை நேரில் பார்த்தால்
போற்றவா இல்லை தோற்றவா
நான் குளம்பி போகிறேன்

மயில்தோகை சுமந்தாலும்
மரவண்டை போலத்தான்
மனதோடும் உனை ஏற்றி
மேடு பள்ளம் பாராமல் சென்றேன்

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
வருவாயா வருவாயா

பாறையின் நடுவே கிணறா
நதிகளின் நடுவே படகா
ஞாபகம் உன் ஞாபகம்
என்னை தாங்கி கொண்டு போகும் அன்பே

உன்னிடம் இல்லா தருணம்
சுவாசிக்கும் நொடியும் மரணம்
ஆயுளின் நீளமே
உன் அன்பின் நீளமே

பனி பெய்யும் நீராலே
மலை ஒன்றும் கரையாது
தொலைதூரம் போனாலும்
உனை தேடி ஓடோடி வருவேன்

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
வருவாயா வருவாயா

என் இரவின் கனவாக
என் நதியின் கரையாக
என் விழியின் துணையாக
வருவாயா நீ வருவாயா



Bramman - En Uyirin Uyiraga

பிரம்மன் - வாடா வாடா வாடா வாடா நண்பா

ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி

ஓ…சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி

ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி

ஓ…சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி

வாடா வாடா வாடா வாடா நண்பா
ஒரு வானம்பாடி
போல எங்கும் சுத்திடுவோம் தெம்பா

வாடா வாடா வாடா வாடா நண்பா
நேருக்கு நேரா
மோதிப்பார்போம் வாழ்க்கை என்ன கொம்பா…

அம்மாடி எம்மாடி
நம் வாழ்க்க கண்ணாடி
கல்லொன்னு இல்லாம தூளாகும் அம்மாடி

ஆத்தாடி ஆத்தாடி
நாமெல்லாம் காத்தாடி
காத்திங்கு இங்கேயில்லேனா என்னாகும் ஆத்தாடி

ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

ஹோய்… ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி

ஓஹோய் சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி

அம்மை தடுப்பை போல
மாறாம எந்நாளுமே
சின்ன வயசு நட்பு
வாழும் நெஞ்சோட

கண்ணில் புகுந்து விட்ட
மண்ணு துகள போல
காதல் நின்னு கொள்ளும்
உள்ளுக்குள்ளார

கடல் தேடி போன
நதிபோல நட்பை
இவன் தேடி போனா
தனியா…

உயிர் நட்பும் இன்று
வெகுதூரம் போச்சே
அட வெயில் பட்ட
பனியா ….

ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

ஹோய்… ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

அஞ்சு நிமிஷம் முன்ன
என்ன நெனைச்சும்முன்னு
ஆராய்ஞ்சு பாத்தியின்னா
ஒன்னும் தோனாது

நெஞ்சு கவல எல்லாம்
பஞ்சா பறந்து போகும்
காலம் மறைந்ததா
காயம் இங்கேது

ஒரு மெழுகு மேலே
பட்ட மழையப் போல
எங்கும் ஒட்டாம வாழ
பழகு….

எது எங்கே போகும்
எது என்ன வாகும்
எதுவும் நம் கையில் இல்ல
உணரு …

ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

ஹோய்… ஜும்மா ஜும்மாலே எம்மா
ஜும்மா ஜும்மாலே
அட எல்லாம் விட்டு ஆட்டம் போடு
நீயும் நம்மாளே

ஓ… நட்பு ஒரு பாதி
காதல் ஒரு பாதி
பிச்சி பிச்சி போட்டதுல
இங்க ஒன்னுமில்ல மீதி

ஓ…சோகம் ஒரு பாதி
தியாகம் ஒரு பாதி
எப்ப வரும் எப்ப வரும்
இவ புன்னகைக்கும் தேதி



Bramman - Vaada Vaada

பிரம்மன் - உன் கண்ணை பார்த்தாலே

உன் கண்ணை பார்த்தாலே
மனசெல்லாம் அலையோசை

அலையோசை
அலையோசை
அலையோசை
அலையோசை

உன் பேச்சை கேட்டாலே
மனசெல்லாம் புது பாஷை

புது பாஷை
புது பாஷை
புது பாஷை
புது பாஷை

வேண்டாம்
என சொன்னா போது கண்கள் தேடுதே
காணோம்
என நெஞ்சம் வாடுதே
போகும்
வழி எங்கும் பூக்கள் சிந்தி மூடுதே
உள்ளம்
உனை மட்டும் நாடுதே

பெண்ணே நீ இல்லாமல்
நான் போக பாதை இல்லையே

ஒஹோ..ஹோ..
பெண்ணே நீ இல்லாமல்
என் வாழ்க்கை முற்றுபுள்ளியே

முதல் காதல் என்றால் மழையும்
வெயிலும்
அதில் வானம் வந்து வில்லாய் வலையும்

என் உலகம் என்றால் நீயும்
நானும்
அதில் காலம் நேரம் எல்லாம் கரையும்

தனியாக வாழ்ந்த காலம்
தாண்டி போகும் நேரம்
தேடி வந்தாய் நீயும்
போதாதா….

அட நேற்று நல்ல தூக்கம்
இன்று ஏனோ ஏக்கம்
காதல் செய்யும் காயம்
ஆறாதா

பெண்ணே நீ இல்லாமல்
நான் போக பாதை இல்லையே

ஒஹோ..ஹோ..
பெண்ணே நீ இல்லாமல்
என் வாழ்க்கை முற்றுபுள்ளியே

நான் கண்ணை திறக்கிற நேரம்
எதிரே
தினம் உன்னை பார்க்கனும் முதலில் உயிரே

என் கண்கள் உறங்கிடும் முன்னே
அதிலே
தினம் கனவாய் நுழைவது நீதான் உயிரே

உன்னை உள்ளங்கையில் வைத்து
ரேகை போலே தைத்து
தாங்க போகும் நாளை தந்தாயே

கடிகாரம் முள்ளாய் நானும்
உன்னை சுற்ற வேண்டும்
நேரம் நிற்க வேண்டும் அங்கேயே

பெண்ணே நீ இல்லாமல்
நான் போக பாதை இல்லையே

ஒஹோ..ஹோ..
பெண்ணே நீ இல்லாமல்
என் வாழ்க்கை முற்றுபுள்ளியே



Bramman - Un Kannai Parthalae

Followers