Pages

Search This Blog

Tuesday, January 8, 2019

பிரம்மன் - என் உயிரின் உயிராக என் விழியின் ஒளியாக

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
வருவாயா வருவாயா

ஆஹா… ஹா..

என் இரவின் கனவாக
என் நதியின் கரையாக
என் விழியின் துணையாக
வருவாயா வருவாயா

ஆ…
மழை பெய்தால் என்ன
ஆ…
வெயில் கடித்தால் என்ன
ஆ…
கடல் நீலம் மட்டும்
என்றும் சாயம் போகாதே

ஆ…
உன்னை என்னும் நேரம்
ஆ…
இதயத்தின் ஓரம்
ஆ…
அடி ஈரமில்லா சாரல்
ஒன்று வீசுதே

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
நீ வருவாயா வருவாயா

என் இரவின் கனவாக
என் நதியின் கரையாக
என் விழியின் துணையாக
வருவாயா நீ வருவாயா

ஓ.. பஞ்சிலே தாவும் தீயும்
நெஞ்சிலே வாழும் அன்பும்
ஓயுமா அடி ஓயுமா
அது மேலும் மேலும் கூடும் அன்பே

காதலை கண்ணில் கண்ட
கடவுளை நேரில் பார்த்தால்
போற்றவா இல்லை தோற்றவா
நான் குளம்பி போகிறேன்

மயில்தோகை சுமந்தாலும்
மரவண்டை போலத்தான்
மனதோடும் உனை ஏற்றி
மேடு பள்ளம் பாராமல் சென்றேன்

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
வருவாயா வருவாயா

பாறையின் நடுவே கிணறா
நதிகளின் நடுவே படகா
ஞாபகம் உன் ஞாபகம்
என்னை தாங்கி கொண்டு போகும் அன்பே

உன்னிடம் இல்லா தருணம்
சுவாசிக்கும் நொடியும் மரணம்
ஆயுளின் நீளமே
உன் அன்பின் நீளமே

பனி பெய்யும் நீராலே
மலை ஒன்றும் கரையாது
தொலைதூரம் போனாலும்
உனை தேடி ஓடோடி வருவேன்

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
வருவாயா வருவாயா

என் இரவின் கனவாக
என் நதியின் கரையாக
என் விழியின் துணையாக
வருவாயா நீ வருவாயா



Bramman - En Uyirin Uyiraga

Followers