Pages

Search This Blog

Showing posts with label Aayirathil Oruvan (1965). Show all posts
Showing posts with label Aayirathil Oruvan (1965). Show all posts

Wednesday, January 4, 2017

ஆயிரத்தில் ஒருவன் (1965) - அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

Aayirathil Oruvan (1965) - Adho Andha Paravai Pola

ஆயிரத்தில் ஒருவன் (1965) - ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்

ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னை பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
யார் கூடுவார்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
இளம்ப்பெண்ணின் கண்ணீரை யார் தேற்றுவார்
எறிகின்ற நெஞ்சைத்தை யார் தேற்றுவார்
யார் தேற்றுவார்

ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

Aayirathil Oruvan (1965) - Adamal Adukiran

ஆயிரத்தில் ஒருவன் (1965) - பருவம் எனது பாடல்

பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
(பருவம்..)

இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்
மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்
தென்றல் என்னைத் தொடலாம்
குளிர் திங்கள் என்னைத் தொடலாம்
மலர்கள் முத்தம் தரலாம்
அதில் மயக்கம் கூட வரலாம்
(பருவம்..)

சின்னஞ்சிரிய கிளி பேசும்
கண்ணங்கரிய குயிர் கூவும்
சின்னஞ்சிரிய கிளி பேசும்
கண்ணங்கரிய குயிர் கூவும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்
பழகும் விதம் புரியும்
அன்பின் பாதை அங்கு தெரியும்
பயணம் அதில் தொடரும்
புது வாழ்க்கை அங்கு மலரும்
(பருவம்..)

Aayirathil Oruvan (1965) - Paruvam Enathu Paadal

ஆயிரத்தில் ஒருவன் (1965) - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மாந்தினிலே ஆறுதன் தாரீரோ
(ஓடும்..)

நாடாலும் வண்ணமயில்
காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
(ஓடும்..)

ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம்
பயணம் போகின்ற நேரம்
காதலியா மனம் தேடும் இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
(ஓடும்..)

Aayirathil Oruvan (1965) - Odum Maegangalae

ஆயிரத்தில் ஒருவன் (1965) - உன்னை நான் சந்தித்தேன்

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்

பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்

எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
வந்த மனதை அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

Aayirathil Oruvan (1965) - Unnai Naan Santhithaen

ஆயிரத்தில் ஒருவன் (1965) - ஏன் என்ற கேள்வி இங்கு

ஏன் என்ற கேள்வி -இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை 
நான் என்ற எண்ணம் - கொண்ட 
மனிதன் வாழ்ந்ததில்லை

பகுத்தறிவு பிறந்தததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே(2)
உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே (2)

ஓராயிரம் ஆண்டுகளாக ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே (ஓராயிரம்)
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே 
(ஏன் என்ற கேள்வி)

நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும் (நீரோடைகள்)
நம் தோள்வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்

முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதினாலே
கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே
(ஏன் என்ற கேள்வி )

Aayirathil Oruvan (1965) - Yaen Endra Kaelvi

ஆயிரத்தில் ஒருவன் (1965) - நாணமோ இன்னும் நாணமோ

நாணமோ? இன்னும் நாணமோ?
இந்த ஜாடை நாடகம் என்ன? 
அந்தப் பார்வை கூறுவதென்ன? 
நாணமோ? நாணமோ?
ஆஆஆ நாணுமோ? இன்னும் நாணுமோ?
தன்னை நாடும் காதலன் முன்னே
திரு நாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ? நாணுமோ?

நாணமோ? இன்னும் நாணமோ?
இந்த ஜாடை நாடகம் என்ன? 
அந்தப் பார்வை கூறுவதென்ன? 
நாணமோ? நாணமோ?

தோட்டத்துப் பூவினில் இல்லாதது ஒரு 
ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்துப் பூவினில் இல்லாதது ஒரு 
ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது அது எது?

ஆடவர் கண்களில் காணாதது 
அதுகாலங்கள் மாறினும் மாறாதது
ஆடவர் கண்களில் காணாதது 
அதுகாலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது அது இது

நாணுமோ? இன்னும் நாணுமோ?
தன்னை நாடும் காதலன் முன்னே
திரு நாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ? நாணுமோ?

மாலையில் காற்றினில் உண்டாவது 
அதுமஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது அது எது?

உண்டால் மயக்கும் கள்ளாவது
அதுஉண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் மாறுவது
ஞானியின் கண்களும் தேடுவது அது இது

நாணமோ? இன்னும் நாணமோ?
இந்த ஜாடை நாடகம் என்ன? 
அந்தப் பார்வை கூறுவதென்ன? 
நாணமோ? நாணமோ?

Aayirathil Oruvan (1965) - Naanamo Innum Naanamo

ஆயிரத்தில் ஒருவன் (1965) - அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

Aayirathil Oruvan (1965) - Adho Andha Paravai Pola

Followers