Pages

Search This Blog

Showing posts with label sethu. Show all posts
Showing posts with label sethu. Show all posts

Friday, January 24, 2014

சேது - மாலை என் வேதனை கூட்டுதடி

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்லவே கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே


காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏன் டா ? அம்பி
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பன்ஸ் என்ன அம்பி
காதல் செஞ்ச பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்கமும் தோன்றிடுமா

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ
வாசங்கள் பேசாத பதில தம்பி
மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ
கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி
அவளின் மௌனம் பார்த்து பதை பதைக்கும் என் மனம்
வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்
மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே
என் மனம் அவள் மடி சாய்கிறதே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

Sethu - Maalai En Vethanai

சேது - எங்கே செல்லும் இந்த பாதை

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய் அன்பே வாராயோ

எங்கே செல்லும் ....

ஊரை விட்டு ஓ ஓர் குடிசை
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்
காதலிலே ஓர் பைத்தியமே
சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்
காணும் கனவுகளில் இன்பம் இன்பம்
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்
காதலென்றால் ஓ வேதனையா

எங்கே செல்லும்....

மண் கேட்டா அந்த மழை பொழியும்
மேகம் பொழியாமல் போவதுண்டா
கரை கேட்டா அந்த அலைகள் வரும்
அலைகள் தழுவாமல் போவதுண்டா
கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே
என் உயிரே ஓ என் உயிரே

எங்கே செல்லும்....

Sethu - Enge Sellum Intha

Followers