Pages

Search This Blog

Monday, January 6, 2014

கனவே கலையாதே - கண்ணில் உன்னைக்கண்டு

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன்
கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இள மானே
கங்கைக்கரை காற்றைக் கேளு கண்ணபெருமானே
காதல் செய்த காலம் எல்லாம் காதில் கூறும் தானே
கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
 
சரணம் -1

சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ
இள மனம் எனும் மலர்வனம் துளிர் விட
தினம் தினம் அவன் இங்கு வருவானா
இனியும் ஒரு அறிமுகமா ? இருவருமே புதுமுகமா ?
அவன் இங்கு வருவானா ? தோழி அடைக்கலம் தருவானா ?
ஈச்சம்பூவை ஈரக்காற்று கூச்சம் தீர கூடிடும் இரவினில்
அவன் இங்கு வருவானா ?
கண்ணா மழை வண்ணா  கண்ணா மழை வண்ணா
என செம்மாங்குயில் போல் கூவுகின்றேன்

 கண்ணில் உன்னை
 கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இள மானே
கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே

சரணம் -2

தொட்டகுறை முன்பு விட்டகுறை
இன்று தொடங்கிட தொடங்கிட
தொடர்ந்திட தொடர்ந்திட புது சுகம் அரும்பாதோ
புயல் அடித்தால் நிலவணையும்
மழை அடித்தால் மலை கரையும்
உனக்கிது தெரியாதா ? கண்ணா உறவுகள் திரும்பாதா ?
மண்ணில் காதல் மாய்ந்ததென்று பார்த்ததில்லை
பூமியில் அதற்கொரு கல்லறை கிடையாது
உன்னை இங்கு என்னை உன்னை இங்கு என்னை
என்றும் ஒன்றாய் சேர்த்த காதல் வாழ்க

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இள மானேகண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
பிறவி உனக்காக எடுத்த கிளி
மனதை உனக்காக கொடுத்த கிளி
இனியும் தனியாக தவித்த படி
இருக்க விடலாமோ தலைவன்மடி

கண்ணில் உன்னைக்கண்டு கொண்டேன் கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன் கன்னி இள மானே

Kanave Kalayadhe - Kannil Unnai

Followers