Pages

Search This Blog

Friday, January 6, 2017

படிக்காதவன் (2009) - கடவுளும் காதலும் வேறு இல்லை

ஆண்: கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரைப் பார்த்தவர் யாருமில்லை
முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ஏய் ஏய் ஏய் 

பெண்: காமமும் காதலும் வேறு இல்லை
எவருக்கும் இதுவரை தெரியவில்லை
முதன் முதல் இரண்டையும் புரிந்தவள் நான் தானே ஏய் ஏய் ஏய்

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ....

ஆண்: தலைகீழ் தெரியுதே வானம்
தலைமேல் உருளுதே பூமி
கலராய் தெரியுதே காற்று
எல்லாம் காதலே (கடவுளும் காதலும்...)

(இசை...)

ஆண்: ஆடைகள் அணிந்து அருவியும் நடந்தால்
உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன்

பெண்: மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால்
உனைப்போல் இருக்கும் என்றுணர்ந்தேன்

ஆண்: நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான்
இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை

பெண்: மீசையின் வன்முறை ரசித்துத்தான்
நான் கூட பார்க்கிறேன் பண்ணிசை

ஆண்: உன் மென்மையை விரும்புதே என் மனம்
போர்க்களம் புகுந்திட வேண்டாம்

பெண்: உன் வன்மையை விரும்புதே பெண்மைதான் 
அகிம்சையை வாரிட வேண்டாம்

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ....

ஆண்: மெல்லினம் என்பது பெண்மை
வல்லினம் என்பது ஆண்மை
இடையினம் என்பது மென்மை
இதுதான் உண்மையே

(இசை...)

ஆண்: முதல் முறை உனை நான் பார்த்ததில் இருந்து
இதுவரை எனை நான் பார்த்ததில்லை

பெண்: உனைக்கண்ட இரவில் கரைந்ததில் இருந்து
இதுவரை இமைகள் மூடவில்லை

ஆண்: உன் இதழிலும் வர்ணங்கள் தெரியுதே
இது என்ன அதிசயம் சொல்லிடு

பெண்: இரவெல்லாம் பகலாய் தோன்றுதே
இது என்ன ரகசியம் சொல்லிடு

ஆண்: நீ புன்னகை சிந்திடும் நொடிகளில்
நான் சிதறிப்போகிறேன் அள்ளிடு

பெண்: உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில்
பொசுக்கென்று மலர்கிறேன் கிள்ளிடு

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ ஓ ஓ...

ஆண்: அழகிய வன்முறை செய் செய்
அதில் கொஞ்சம் இம்சைகள் வை வை
அதுதான் காதலில் மெய் மெய்
அதில் இல்லை பொய்யடி (கடவுளும் காதலும்...)

Padikathavan (2009) - Kadavulum Kadhalum

Followers