Pages

Search This Blog

Tuesday, January 23, 2018

சரவணன் இருக்க பயமேன் - மரஹபா

மரஹபா……… நான் மனிதிலே நீதானா     
நீயுமே நானம் துள்ளினேனா புள்ளிமா………னா     
வெண்ணிலா பிறையே வந்ததேன் தரையே     
ஈகை இறைவனின் கொடை நீயோ……     
வெண்ணிலா திசையே எந்தன் ஏழிசையே     
மன விளக்கதன் ஒளி நீயோ     
கண்ணில் கனா கனா கனா      
அதனால் கலைந்தேன் நா………ன்      (மரஹபா)
     
அன்னை மடியை தேடும் குழந்தை     
கண்டவுடன் தாவிடுதே     
அந்தக்கதைப்போல் ஆசை மனம்     
உன்னழகை ஏந்திடுதே     
இந்த சுகம் சுகம் நிதமும் தொடர     
எண்ணங்கள் ஏங்கிடுதே     
கொஞ்சம் பொரு பொரு      
இதை நீ நகர்ந்தால்     
என்னுள்ளம் தேங்கிடுதே     
நினைவே சுடுதே     
மனமே ஏ ஏ ஏங்கிடுதே……      (மரஹபா)
     
வெள்ளிச்சலங்கை ஓசை மறக்கும்     
வெட்கப்பட நீ சிரித்தா……ல்     
இன்னும் தினமும் வாழப்பிடிக்கும்     
கண்கள் உனைப்பார்த்திருந்தால்     
மஞ்சள் நிலா நிலா மசப்பை அடையும்     
உன் சொல்லைக்கேட்டிருந்தால்     
அந்திப் பகல் பகல் பகல் இரவிக்கை அணியும்     
உன் கையில் நான் இருந்தால்     
எனை நீ… அடைந்தால்      
அதுவே…… பெருநாள்      (மரஹபா)



Saravanan Irukka Bayamaen - Marhaba Aavona

சரவணன் இருக்க பயமேன் - லாலா கட சாந்தி

வெதவெதமாய் இனிச்சிருக்கும்     
வெடலப்பொண்ணு நானு     
விருப்பப்பட்டு நெறுங்கி…… வந்தா     
வெலக்கணைக்குன்னு     
வாம்மான்னு நீ சொன்னா தருவேனே தே……னு     
வட்டியோட அசலவாங்கும் அதுதானே சீ……னு     
     
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
பார்த்தா பளபளக்குற பாலா வழிய வைக்கிற     
கீத்தா கிழியவைக்கிற கிறுக்கேத்தி     
கேட்டா கதையலக்குற கேப்பான் என்ன வெடிக்கிற     
தீட்டா ஒதுங்கி நிக்கிற உசுப்பேத்தி      
     
லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி     
லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி     
ஏன்டா எலி புடிக்கிற ஈயா இலை விரிக்கிற     
தூண்டி துரவும் நிக்கிற சுதி ஏத்தி     
வான்டா சுழல வைக்கிற வாகா வழி மறிக்கிற     
தாண்டி தவறு பன்னுற அடி ஆத்தி      (லாலா)
     
ஆச வெறகடுப்புல வேக வெளைஞ்சி நிக்கிற     
ரோசா ஒன்ன நெனைக்கையில் நெடியேறும்     
     
பாசி பயிறக்கண்ணுல பாதாம் பறுப்பு செய்யிற     
ராசா ஒன்ன நெறுங்கையில் ருசி மாறும்     
     
மத்தாக மனச நீ கடையாம      
என்ன மாராப்பில் பதம்பாரு     
     
சொத்தாக சகலமும் தரப்போறேன்     
மத்த சாப்பாட்டில் பசியா……ற     
     
உசுரே…… கேக்கா……     
ஒன நான் தூக்க வாரேன்      
மாமன் கூத்தடிக்க      (லாலா)
     
பாலும் கொதிச்சிருக்குது      
பாயும் விரிச்சிருக்குது     
ஆனா அது எதுக்குன்னு தெரியாதா?     
     
காயும் கனிஞ்சிருக்குது     
பாயும் நனஞ்சிருக்குது     
ஆனா அது ஒனக்குன்னு புரியாதா?     
     
உன் கண்ணாடி வளவியும் ஒடையாம     
உன்ன கட்டோட மடிப்பேனே……     
     
என் கண்டாங்கி பொடவையும் கசங்காம     
தொட மல்லாந்துக்கிடப்பேனே……     

ஒடனே வாடி…… ஒழுங்கா தாடி…     
மூடி போட என்னாதடி……



Saravanan Irukka Bayamaen - Lala Kadai Santhi

கடம்பன் - ஹேய் உச்சி மலை அழகு

தந்தான நானே ஏ தந்தான நானே     
ஏ தந்தான தந்தான தந்தான நானே     
ஏ தந்தான தந்தான தந்தான தந் தானே     
ஏ தந்தான நானே ஏ தந்தான நானே     
ஏ தந்தான தந்தான தந்தான நா     
ஏ தந்தான தந்தான தந்தான நா…னே……     
     
ஹேய் உச்சி மலை அழகு ஆதாரமா உள்ளவர     
இந்த ஊரு ஒலகமே செழித்து வாழ இல்ல கொற     
பச்ச செடி கொடிங்க பழகி பேசி அள்ளித்தர     
நாங்க கைய ஏந்தித்தான் பொழைக்கமாட்டோம் போகும்வர     
காசு பணம் சொத்து சொகம் போயிடும் தொலைஞ்சிதான்     
நம்ம காக்கும் இந்த காட்ட நம்;பி     
வாழ்வோமே துணிஞ்சிதான்      
காசு பணம் சொத்து சொகம்      
போயிடும் தொலைஞ்சிதான்     
நம்ம காக்கும் இந்த காட்ட நம்பி      
வாழ்வோமே துணிஞ்சிதான்      (உச்சி)
     
பாம்பு தோளு பல்லி கூட பாசங்காட்டி தள்ளி ஓட     
கூடி வாழும் இந்த வாழ்வ கொண்டாடுவோம்     
குறை இல்லாமலே நாளும் பொழுதும் பண்பாடுவோ…ம்     
கருவுல போகும்வரையில தாங்குது காடு மடியில      
ஏ………… ஏஹே…………     
     
ஓடை நீரில் தாவும் மீன      
ஒன்னா சேர்ந்து கொம்பு தேன     
பங்குபோடும் எங்க கூட்டம் ஜோரானதே     
வழி மாறாமலே போகும் திசையோ நேரானது     
இருப்பதை எல்லாம் கொடுக்குற காடா      
இறைவன் இருக்குறான்     
அடிக்குற காத்துல அசைஞ்சிதான்      
அழகா அவனும் சிரிக்கிறான்



Kadamban - Uchimalai Azhagu

கடம்பன் - ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல்

ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல் என்ன      
பொழுதும் உலுக்குறியே     
இந்த சீம முச்சூடும் நெறைஞ்சி நின்னாலும்     
சிரிச்சே நீ என்ன கொல்லுறியே     
     
சாம கோடாங்கி உடுக்கபோல் என்ன     
பொழுதும் உலுக்குறியே     
இந்த சீம முச்சூடும் கரைஞ்சி நின்னாலும்     
சிரிச்சே நீ என்ன கொல்லுறியே     
     
ஏ முத்துனவ ரத்தினமே முந்தி அணிஞ்சி     
நீ வந்து நிக்க போகுது என் கண்ணு அவிஞ்சி     
     
பணமே இல்லாத கரும்பா உன் பேச்சி     
மனச தித்திப்பா மாத்திடுச்சி     
     
கோடி ரூபாய கொடையா தந்தாலும்     
ஒதுக்கி வைப்போமுங்க     
எட்டு மாடி வீடெல்லாம்      
எதுக்கு வேணாங்க     
ஓல கொட்டாயே போதுமுங்க     
     
காடு பூராவும் ஒதவும் சொந்தந்தான்     
கலங்கமாட்டோமுங்க     
வேற ஆளே உள்ளார துணிஞ்சி வந்தாலே     
உசுர தந்தாச்சும் காப்போமுங்க     
     
ஏ கட்டையில போரதுதான் இந்த உசுரு     
இத எதையும் தன்னுள்ள மறைச்சி வைக்காத      
காடா வாழ்வோமே நாங்க நாங்க     
     
ஆசப்பாட்டாலும் எதையும் கேட்காம எடுக்கக்கூடாதுங்க     
வெளி வேசம் போடாம நெசமா வாழ்ந்தாலே     
எதுவும் தன்னால கைகூடுங்க     
     
வேரே இல்லாம மரமும் வாழாது      
வெவரம் சொல்வோமுங்க     
வெந்த சோறே ஆனாலும் ஒழைச்சி திங்காட்டி     
ஒடம்பில் ஒட்டாது கேட்டுக்குங்க     
     
ஏ உத்தமனா வாழும்வரை இல்ல கவல     
நீ ஒன்னனதான் நம்பும்வர உண்டு ரகல     
     
வழியும் மாறாம நடந்தா தப்பில்ல     
நிமிர்ந்து வாழ்வோமே ஊரே சொல்ல



Kadamban - Saama Kodaangi

கடம்பன் - ஒத்த பார்வையில் என்ன ஏன்டி

ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ      
படம் போட்டுக்காட்டுற     
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே      
இடுப்போரம் மாட்டுற     
மொத்த ஆசையும் ஒரு சேர ஒன்ன கேட்குதே பரிமாற     
புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற     
     
முத்தப்பார்வையில் என்ன நீயும் ஏன்      
படம் போட்டுக்காட்டுற     
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே      
இடுப்போரம் மாட்டுற……     
     
ஊரே……… பார்க்க…… போறேன்… ஒன்னத்தூக்க     
     
காத்தே பாவம் கூட கண்ணில் பார்க்காம     
காலம் பூரா ஒன்ன காதல் செய்வேன் கேட்காம     
     
ஏதேதோ ஏமாத்துர என் நெஞ்ச பாழாக்குற     
ஆகாத பேச்ச பேசி ஆள சூடேத்துற      (ஒத்த)
     
ஆசையில்…… தான்டி…… வாரே…ன் உன வேண்டி…     
     
என் வாழ்க்க பூரா ஒன்ன சேர்ந்தா போதாதே     
வாழ்வே நீயா மாற கோடி ஜென்மம் தீராதே     
     
அய்யய்யோ உன் பேச்சில ஆகாயம் என் கையில     
ஏத்தாத என்ன நீயும் ஆச பல்லாக்குல



Kadamban - Otha Paarvayil

கடம்பன் - இளஇரத்தம் சூடேற திசை எட்டும்

இளஇரத்தம் சூடேற திசை எட்டும் தூளாக     
பகை இல்லை இல்லை கைகள் சேர     
ஒரு யுத்தம் ஈடேற பயம்மில்லை போராட     
விடிவெள்ளி எங்கள் பேரை கூற     
எதிராளி யாரென நாங்கள் அறிவோமே மண் மேலே     
ஒரு போதும் தோல்விகள் இல்லை     
நடப்போமே முன்னாலே      (இளஇரத்தம்)
     
ஓ……… கண்ணீரென்ன கண்ணீரென்ன      
கண்ணிலே ரெண்டிலே ஒன்றை     
இன்றே செய்வோம்     
மண்ணிலே எங்கே எங்கே குற்றம் இங்கே     
தேடாமல் தீராதே சோகங்களே     
தீயிலே வாட்டுவோம்     
செல்லாத காசுபோல் எம்மையாக்கிய      
சூழலை மாற்றுவோம் எல்லையை மீறுவோம்     
இன்னும் சீறுவோம்      
நாங்களும் யாரென காட்டுவோம்      (இளஇரத்தம்)
     
ம்………… எல்லோருக்கும் எல்லாம் இங்கே     
சொந்தமா செவ்வானந்தான்     
முள் வேலிக்குள் தங்குமா     
அன்னை தந்தை என்றும் எங்கள் காடென்று      
வாழ்ந்தோமே நீங்காமலே     
பொன்னான காடிதை சூரையாடினால்     
வேட்டையும் ஆடுவோம்     
என்னாலும் வேலிபோல் நாங்கள்      
எங்களை காவலாய் போடுவோம்     
ஆயுதம் தூக்குவோம் வேதனை போக்குவோம்      
வெற்றியின் உச்சியில் ஏறுவோம்      (இளஇரத்தம்)



Kadamban - Ilarattham Soodera

கடம்பன் - ஆகாத காலம் ஒன்னு அடியோட

ஆகாத காலம் ஒன்னு அடியோட ஊரக்கொன்னு     
பொதைச்சிட்டுப் போயிடுச்சே……     
சானேற கீழத்தள்ளும் சதிகார கூட்டம் எங்க     
பொனந்திண்ணக் கூடிடுச்சே……     
கொடிகாலாக நீண்ட எங்க குடிசையும் கூரையும்     
தீஞ்சது தீயாற……… ஓ………     
அடி வேராக வாழ்ந்த எங்க தலமுற கோபுரம்     
சாஞ்சது யாரால முடிவுல போனோமே தோத்து     
வெலங்கலயே இந்த கூத்து      (ஆகாத)
     
ஏ…… வெல்லாம காடு காஞ்சா     
ஒரு போகந்தான் பாழாப்போகும்     
கண்ணான காடு தீஞ்சா     
உயிரெல்லாம் ஊனம் ஆகும்     
அன்னாந்து பார்த்தேன் வானம்     
மழ சிந்தாம ஏது பூமி     
மல்லாந்து போன நீதீ     
வெறும் மண்ணாகிப்போச்சே சாமி     
தல ஓஞ்சோமே………     
அஞ்சாமலே வாழ்ந்தோமே      
ஏமாந்துதான் மாஞ்சோமே      (ஆகாத)
     
அப்பாவியான நாங்க அடிப்பட்டோமே நாடே பார்க்க     
கொத்தோட நாங்க சாய ஒரு ஆளில்ல கேள்வி கேட்க     
முன்னால ஆண்ட கூட்டம்     
முகம் இல்லாம மூலி ஆனோம்     
வென்னீரு பாஞ்ச வேரா     
தெசை எங்கேயும் காணா போனோம்     
புலியானோமே……………     
அஞ்சாமலே வாழ்ந்தோமே ஏமாந்துதான் மாஞ்சோமே…… 
(ஆகாத)



Kadamban - Aagaadha Kaalam

Followers