Pages

Search This Blog

Tuesday, November 22, 2016

விண்ணுக்கும் மண்ணுக்கும் - ஆகாயம் பூக்கள் விற்க

ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம்பேசி நிற்குதடி மேகம்
(ஆகாயம்..)

ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்
சுவாசிக்கும் கார்காலம்
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு
கை கோர்த்து கல்யாணம்
குட்டை வால் ஓனான் வேலிக்குள்
குதித்தாடும் உற்சாகம்
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்
(ஆகாயம்..)

சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சூரியனின் ரேகை மோதாமல்
சொட்டும் பனி சங்கீதம்
(சோலைக்கதிர்..)
கொப்பளத்த நீரை யானைகள்
துப்புவதில் குற்றாலம்
குட்டி கங்கை ஒவ்வொரு புள்ளிளும்
கூடி ஏறும் விடியற் காலம்

குறவை மீன் தாவி துள்ளுவதே
கூழாங்கல் மென்மையில்லையடி
குன்று மேல் வானை பூச்சியொரே
குடை செய்ய ஆசையுள்ளதடி
வானம் மழை தூவும் பருவத்தில்
வருடும் புது மண் வாசம்
வாய்கால் வழியோடும் தண்ணீரில்
கப்பல் விட உத்தேசம்
(ஆகாயம்..)

ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே
அமரும் ஒரு மீன்கொத்தி
அரை பவுனில் செய்து தருவோமா
அதற்கும் ஒரு மூக்குத்தி
(ஆற்றங்கரை..)
அதிகாலை சூரியன் வானத்தில்
மணி பார்க்கும் கடிகாரம்
அலங்காரம் செய்கிற வானம்
ஏழு வண்ண உதட்டு சாயம்
வல்லாரை லேகியம் இல்லாமல்
வானவில் ஞாபகம் தோன்றுதடி
கல்லூரி சென்று படிக்காமல்
கண்ணாலே வைத்தியம் பார்க்குதடி
நதியோர ஈச்சங்கீற்றின்
நாக்கு ரொம்ப நீளும்
நான் அங்கே வளைந்ததென்று
நக்கை பண்ணி பேசும்
(ஆகாயம்..)
(ஒற்றை செடி..)

Vinnukum Mannukum - Aagayam Pookkal

விண்ணுக்கும் மண்ணுக்கும் - உனக்கென உனக்கென பிறந்தேனே

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
(உனக்கென..)

திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை
தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே
(உனக்கென..)

கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
பகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோதும் உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்
(உனக்கென..

Vinnukum Mannukum - Unakenna Unakenna

உயிரிலே கலந்தது - உயிரே உயிரே அழைத்ததென்ன

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் ...மறைந்ததென்ன

உயிரே  உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன (உயிரே)
உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்  மறைந்ததென்ன

நீ தோன்றினாய்  அடிவானமாய்
நான் வந்ததும் தொலைவாகினாய்
கண்மூடினேன் மெய் தீண்டினாய்
கை நீட்டினேன்  கனவாகினாய்
மழைச் சாலையில் குமிழாகினாய்
விரல் தீண்டினேன் ...உடைந்தோடினாய்
என் தூரத்து விண்மீனே ...
கை ஓரத்தில் வருவாயா
என்னை ஒரு முறை தொடுவாயா ...
ஒளியே ....

உயிரே ...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன

காற்றேன்கிலும் ...உன் கீர்த்தனை
கண்ணீரிலே ...ஆராதனை ...
என் தோட்டத்தில் உன் வாசனை
என் ஜீவனில் ...உன் வேதனை
நான் தேடினேன் என் கண்ணனை
புயல் சூழ்ந்ததே என் கண்களை
நான் வேறெங்கும் மறைவதில்லை
என் வேறென்றும் அழிவதில்லை
உன் வானம் முடிவதில்லை ...
உறவே ....

உயிரே ...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன
உயிரே...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன
உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

Uyirile Kalanthathu - Uyire Uyire Alzaithathenna

ஆனந்த பூங்காற்றே - உதயம் தியேட்டருல என் இதயத்தை

டைட்டானிக் காதல் போல
உன் காதல் மூழ்காதப்பா
இது டைட்டான காதலப்பா
ரொம்ப வெயிடான காதலப்பா

அஸ்தரிக்க…

ஓ காட்…

ஆஹா இஸ்தரிக்க…

ஓ காட்…

எங்கடா தொலச்சே…

இங்கதான் தொலச்சேன்…

எப்படா தொலச்சே…

ஜஸ்ட் னவ்…

எதடா தொலைச்சே…

ஹார்ட தலைவா…

உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
எம்மா ராகினி ரோஹினி ரூபினி ருக்மணி
கேட்டு சொல்லடி கிருஷ்ணவேனி

உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா

கண்ட கண்ட பெண்ணை எல்லாம்
காதலிச்ச தப்பப்பா
கண்ணுக்குள்ள மனம் துடிக்கும்
கண்டுபுடிக்கணும் அப்பப்பா
முதல் முதல் சந்திப்பில்
முத்தம்மிடல் தப்பப்பா
தொடாம தள்ளி இருந்து
துடிக்க வைக்கனும் அப்பப்பா
நெஞ்சில் என்ன வலி இருக்கும்
நேரே சென்று நீயே சொல்லு
அஞ்சாரு வாரம் வரை
அஞ்சு மீட்டர் தள்ளி நில்லு
சந்தர்ப்பம் நேரும்போது
ஜம்முக்காளத்தில் மொத்தம் அள்ளு
தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா

உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா

காதல் ஒரு தப்பு இல்லை
எல்லை மீறல் ஆகாது
பூமியில ஃபூட்பால் ஆட
நிலா கேட்க கூடாது
முறை உள்ள காதல
மூடி வைக்க கூடாது
தங்க கிளி பறந்த பின்னே
தாடி வைக்க கூடாது
காதலிக்க ஆசை பட்டா
கஷ்டப்பட கத்துக்கப்பா
மீனு தின்ன ஆசை பட்டா
முள்ளிருக்கும் ஒத்துக்கப்பா
சிந்திச்சு முடிவெடுத்து
நீயும் கொஞ்சம் முந்திக்கப்பா
தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
எம்மா ராகினி ரோஹினி ரூபினி ருக்மணி
கேட்டு சொல்லடி கிருஷ்ணவேனி

உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா

Anantha Poongatre - Udhayam Theatre

அரசு - மல்லிகை மல்லிகை பந்தலே

மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே

முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில

வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)

செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே
பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி
நிலையான வாழ்க்கை போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே
இந்த அருகம்புல்லின் மேல்
பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே

அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே
பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே
கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே
சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும் அணைத்து சாய்த்தேனே
உந்தன் விழியில் கண்டேனே
எந்தன் கனவை கண்டேனே
உந்தன் உள்ளத்தை கண்டேனே
எந்தன் உணவை கண்டேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)
(முந்திரி..)

Arasu - Malligai Malligai

Monday, November 21, 2016

ஆனந்த பூங்காற்றே - செம்மீனா விண்மீனா

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா 

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா 
கண்ணோடு வாழும் கலைமானா - இல்லை 
கண் தோன்றி மறையும் பொய்மானா 
கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா 
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா 
வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா 
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா 

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா 
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா 

இருளைப் பின்னிய குழலோ 
இருவிழிகள் நிலவின் நிழலோ 
பொன் உதடுகளின் சிறுவரியில் 
என் உயிரைப் புதைப்பாளோ 

ரவிவர்மன் தூரிகை எழுத்தோ - இல்லை 
சங்கில் ஊறிய கழுத்தோ 
அதில் ஒற்றை வேர்வைத் துளியாய் 
நான்  உருண்டிட மாட்டேனோ 

பூமி கொண்ட பூவையெல்லாம் 
இரு பந்தாய் செய்தது யார் செயலோ 
சின்ன ஓவியச் சிற்றிடையோ 
அவள் சேலை கட்டிய சிறுபுயலோ 
என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள் - அவை 
மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள் 

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா 
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா 

அவளே என் துணையானால் 
என் ஆவியை உடையாய் நெய்வேன் 
அவள் மேனியில் உடையாய்த்  தழுவி 
பல மெல்லிய இடம் தொடுவேன் 

மார்கழி மாதத்து இரவில் 
என் மாங்கனி குளிர்கிற பொழுதில் 
என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை 
என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன் 

மோகம் தீர்க்கும் முதலிரவில் 
ஒரு மேகமெத்தை நான் தருவேன் 
மாதம் இரண்டில் மசக்கை வந்தால் 
ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன் 

அவள் நடந்தாலோ இடை அதிர்ந்தாலோ 
குழல் உதிர்க்கிற பூவுக்கும் பூஜைகள் புரிவேன் 

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா 
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா 
கண்ணோடு வாழும் கலைமானா - இல்லை 
கண் தோன்றி மறையும் பொய்மானா 
கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா 
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா 
வெண்ணிலாவின் தீவா அவள் வெள்ளைப்பூவா 
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா 

செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா 
செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா

Anantha Poongatre - Semmeena

ஆனந்த பூங்காற்றே - சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது

சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
சோலைக்குயில் பாடும்..
ஹ்ம்ஹூம்.. அப்படி இல்லே..
தானனன னானா னானனனனானா..

சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
ம்ம்.. அப்படித்தான்..

சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு?
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதேன்?
இசையின் லயத்தில் அல்லவா?
அதை உள்ளே கேளு நீயும் பாடு..
(சோலைக்குயில்..)

கொட்டும் மழை முடிந்திட பிறகு
கொடிகளில் இலையில் இருந்து
சொட்டுகின்ற மழையின் துளிகள்
பல கதை சொல்லுமே அதை கண்டுபிடி மனமே
குடங்களை குளத்தில் நிறைத்து
குமரிகள் நடக்கும் பொழுது
குடத்துக்குள் தழுங்கும் அலைகள்
சப்தஸ்வரம் சொல்லுமே
நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேறன்றோ
பறவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ
பெண்ணின் கையோடு வலையொலி சங்கீதம்
பெண்ணின் காலோடு கொலுசொலி சங்கீதம்
அந்த வலையும் கொலுசும் சங்கீதம் உனக்கு சொல்லித்தரவா
(சோலைக்குயில்...)

துள்ளி வரும் குழந்தை எடுத்து அள்ளிவைத்து அணைக்கும் போது
நெஞ்சுக்குள்ளே நஞ்சை உதைப்பது சின்ன சுகமல்லவா
அது நெஞ்சுக்கு அழகல்லவா
இதயங்கள் எறியும் பொழுது இதயத்தை புரிந்த ஒருத்தி
இருந்தால் சின்ன சுகமல்லவா
சுற்றமெல்லாம் போன பின்னும் தனிமைதான் சின்ன சுகம்
வெண்ணிலவு போன பின்னும் வெட்டவெளி சின்ன சுகம்
இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம்
இந்த சந்தோஷம் சோகத்திலும் சின்ன சுகம்
ஒரு ஆனந்த பூங்காற்றாய் அள்ளி தருவது இசை இசை அல்லவா
(சோலைக்குயில்..)

Anantha Poongatre - Solai Kuyil

Followers