Pages

Search This Blog

Showing posts with label Kanne Kalaimaane. Show all posts
Showing posts with label Kanne Kalaimaane. Show all posts

Wednesday, December 18, 2019

கண்ணே கலைமானே - அழைகட்டுமா தாயே அழைகட்டுமா

பச்ச வய காட்டுக்குள்ள
புங்க மரம் பூத்திருக்கு
நாள் வழி சாலையில
புளிய மரங்களுமே பூத்திருக்கு

எட்டு திக்கு எங்கும்
எங்க வேப்ப மரமும் பூத்திருக்கு
நீ வர போகும் நேரம் பார்த்து
பூத்த பூவெல்லாம் கண் முழிச்சு காத்திருக்கு

ஆத்துல வந்தவளே வைகை ஆத்துல வந்தவளே
எங்க சோழவந்தான் மாரியம்மா
உன்ன அன்போடு அழைக்கட்டுமா
அன்போடு அழைக்கட்டுமா

அழைகட்டுமா தாயே அழைகட்டுமா
அந்த அருகம்புல்லு மாலைகாரி
அழைகட்டுமா தாயே அழைகட்டுமா
நம்ம வெயிலு வந்த மாரியம்மன
அழைக்கட்டுமா ஓடியா ஆத்தா

வன்னி மரம்பிழந்து என் ஆத்தாளுக்கு
வன்னி ஒன்னு மரம்பிழந்து
என் தாய கொண்டு செல்ல
வாகான பெட்டி செஞ்சான்

அந்தவன பெட்டிக்குள்ள
என் அஞ்சனமையில் காரியே
அங்க அடங்காத கோவக்காரி

எங்க சோழவந்தான் மாரியம்மன
எப்படி அடசான் தெரியுமா

அங்க மச்சனம்மா பூசிகாரி அழைக்கட்டுமா
அந்த மரிகொழுந்து ஆட்டக்காரி அழைக்கட்டுமா
அங்க செப்பு நல்ல சிலை அழகி அழைக்கட்டுமா
அந்த சிங்கார உடை அழகி
அழைக்கட்டுமா ஓடியா ஆத்தா

நாட்டுல பஞ்சம் பசின்னு ஏதும் இல்லாம
பட்டினியா கெடந்திருக்கும் வேலையில
இந்த மக்கள் எல்லாம் கூடி நிற்கும் போது
என்ன செய்வோம் என்று சொல்லி

அன்று யோசித்து பார்க்கும்போது
அந்த அனந்த மல மாய கண்ணன்
அந்த வர்ண பகவான அழைச்சி டோய்
அடிச்சு பெய்த மழையின்னு சொல்றான்

அங்க அடிச்சதோர் புயல் மழையாம்
என் ஆத்தாள் பெட்டி மேல் கிளம்பா
அந்த பால் ஆத்து தண்ணியில
அந்த தேன் ஆத்து தண்ணியில


நம்ம சோழவந்தான் ஆத்துகுள்ள
உன் பெட்டியுமே ஒதுங்குதம்மா
என்ன இது பெட்டி என்று
ஏறிட்டு பார்க்கும் போது
என் செல்ல மக மாரியம்மா பெட்டியம்மா

பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா
அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா
பெட்டியில வந்தவளே அழைக்கட்டுமா
அந்த பேரும் புகழ் பெற்றவளே அழைக்கட்டுமா

எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா ஆத்தா
எங்க எங்க சோழவந்தான் மாரியம்மா அழைக்கட்டுமா
எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா
எங்க சொர்ணமுத்து மாரியம்மன அழைக்கட்டுமா ஆத்தா

பெட்டி வந்துருச்சு அப்பா
என் மக்கள் எல்லாம் கூடி
நின்னுருச்சு அப்பா
என்ன இது பெட்டின்னு சொல்லி
பாக்க பயமா இருக்குன்னு சொல்லி

யோசிச்சு பார்க்கும்போது
ஆஹா பெட்டியில தங்கம் இருக்குமோ
இல்ல வைரம் இருக்குமோ
இல்ல ஏதோ இருக்கும்னு சொல்லி

யோசித்து பார்க்கும் போது
நம்ம தாய் பெட்டிடா
நம்ம சோழவந்தான் காத்த
மாரி பெட்டிடான்னு சொல்லி

எடுத்து நம்ம மக்கள் எல்லாம்
சாதிசனம் எல்லாம் கூடி வெச்சு
பார்க்கும் போது

வருஷ வருஷம் கெளரிக்கு
ஆத்தாளுக்கு கொழுவாக
அமர்ந்திருக்கும் வெளியில
இந்த மக்களுக்கெல்லாம் எப்படி
காட்சி தர தெரியுமா

அவளுக்கு 21 தெய்வங்களும் ஹேய்
அங்க 61 பந்திகளும்
அத்தனைக்கும் காவக்காரன்
எங்க 18ஆம் படி கருப்பன்
எப்படி காவகாக்குறான் தெரியுமா

அங்க பாக்க பயமா இருக்குது
கருப்ப சாமி
பக்கம் வந்தா புல்லரிக்குது
அங்க பாக்க பயமா இருக்குது
கருப்ப சாமி
பக்கம் வந்தா புல்லரிக்குது

வெள்ள நல்ல குதிரையில
வீச்சருவா கொண்டுகிட்டு
வெள்ள நல்ல குதிரையில
வீச்சருவா கொண்டுகிட்டு
வெள்ள நல்ல குதிரையில
வீச்சருவா கொண்டுகிட்டு

வெளையாடி ஆடி வாரான்
வெளையாடி ஆடி வாரான்
கோட்ட கருப்ப சாமி

பாக்க பாக்க பாக்க
பாக்க பயமா இருக்குது
கருப்ப சாமி
பக்கம் வந்து புல்லரிக்குது

ஓடி வா கருப்பா



Kanne Kalaimaane - AlaiKattuma

கண்ணே கலைமானே - வா வெள்ளை ராசத்தியே

வா வெள்ளை ராசத்தியே
மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்

வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்
நிலை பாடு மாறாதடி
வானத்தின் உயரம்
கூடுமா குறையுமா

மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசை இருக்கும்

அன்பின் கண்ணில்
குற்றம் இல்லை
குற்றம் பார்த்தால் 
அங்கே அன்பில்லை

பார்க்கும் எதுவும் சிறிது இல்லை
பனித்துளி கூட
எறும்பின் கடல்தானே
அன்பில் சிறிது பெரிது கிடையாதே
ஆற்றில் சகல துளியும் சமமே


வேதம் சொல்ல ஒருவர் போதும்
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா
எங்கோ பிறந்தோம்
இங்கே சேர்ந்தோம்

நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்

மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்
வாழ்வில் ருசி இருக்கும்

நேசம் கொண்ட நெஞ்சம்
நிலை பாடு மாறாதடி
வானத்தின் உயரம்
கூடுமா குறையுமா



Kanne Kalaimaane - Vellai Rasathiye

கண்ணே கலைமானே - நீண்ட மலரே நீண்ட மலரே

நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோனுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே

கண்ணே கலைமானே என்று
கவிதை நெஞ்சு கதருதடி
பெண்ணே உந்தன் பேரை தவிர
எல்லா மொழியும் அழியுதடி

சுற்றி கொள்ள வேண்டும் உன்னை
சுற்றுசூழல் மறந்தபடி
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி

நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோணுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே

உன்னை எண்ணி
சாலை போனால்
வீடு கடந்தே போகின்றேன்
ஏறும் ஏறும் என்றே
எங்கள் தப்பை எண்ணினேன்


கிழக்கு எங்கே மேற்கு எங்கே
மறந்து போச்சே உன்னாலே
நீ இருக்கும் திசையெல்லாமே
கிழக்கு என்றே காணுவேன்

என் வேர்களில் நீராகிறாய்
என் பூக்களில் தேன் ஆகிறாய்
என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்

இனிமையாக துன்பம் செய்கிறதே
உன் பார்வைகள்
என்னை கொன்று இன்பம் செய்கிறதே
குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்
உன்னை பார்த்ததும்
குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்

நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோனுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே



Kanne Kalaimaane - Neenda Malarae

கண்ணே கலைமானே - செவ்வந்தி பூவே

செவ்வந்தி பூவே
செவ்வான தீவே
தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே

என் வீட்டுகாரா
தென்னாட்டு தீரா
கண்ணாக வந்தாய் முன்னாலே
பெண்ணாகி போனேன் உன்னாலே

அடியே வங்கிகாரி
முத்தம் கடனா தாடி
வட்டி அசலுக்கு மேல
போட்டு தாரேன்

உன்ன பிணையா தந்து
உயிர எழுதி தந்தா
இரவுக்கு என்ன
கடனா தாரேன்

கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்
கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்
தள்ளி போடாதே
தாப்பா போடாதே

உன்னை பிள்ளை செய்வேன்
கொஞ்சம் தொல்லை செய்வேன்
கண்ணா ஆசைக்கு தோதா
ஆண்மை செய்வேன்


வீட்டில் வேலை செய்வேன்
தோட்டம் தூய்மை செய்வேன்
சந்தர்ப்பம் பார்த்து
தாய்மை செய்வேன்

அப்பாவி பூனை பாலை குடிக்குமா
பூனைக்கு பானை என்ன பொறுக்குமா
சற்று தள்ளி போ
நேரம் சொல்லி போ

செவ்வந்தி பூவே
செவ்வான தீவே
தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே

என் வீட்டுகாரா
தென்னாட்டு தீரா
கண்ணாக வந்தாய் முன்னாலே
பெண்ணாகி போனேன் உன்னாலே




Kanne Kalaimaane - Sevvandhi Poove

கண்ணே கலைமானே - எந்தன் கண்களை காணோம்

எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை
தொலைத்தேனா..?

எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான்
விழிப்பேனா..?

நேரில் வந்தாள்
ஏன் என் நெஞ்சில் வந்தாள்.?

உயிர் கூட்டுக்குள் புகுந்து
பூட்டி கொண்டாள்
எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று

காதல் என்றால்
கெட்ட வார்த்தை என்றால்
இந்த கலகப்பூச்சிகள்
பிறப்பது ஏன்..?

சாதி கண்டே
காதல் தோன்றும் என்றால்
பட்ஷி விலங்கு ஜாதிக்கு
ஜாதகம் எது..?

கல்யாணம் தானே
காதலின் எதிரி என்றால்
கல்யாணம் தேவையா..?


உன்னையும் என்னையும்
பிரிக்கும் பெரும் பள்ளத்தை
முத்தம் கொண்டே மூடவா..?

எந்தன் கண்களை காணோம்

எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை
தொலைத்தேனா..?

எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான்
விழிப்பேனா..?

நேரில் வந்தாள்
ஏன் என் நெஞ்சில் வந்தாள்.?

உயிர் கூட்டுக்குள் புகுந்து
பூட்டி கொண்டாள்
எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று



Kanne Kalaimaane - Kanne Kalaimaane

Followers