Pages

Search This Blog

Wednesday, July 8, 2015

பாகுபாலி - தீரனே

ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நான் செந்தேனா?
ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நீ வண்டுதானா?

அந்தரத்தில் ஒரு 
வெண்மதியாய் உன்னை அழைத்தேனா?
இந்திரலோகத்துச் 
சுந்தரி உனக்கே உனக்காய் முளைத்தேனா?

வீரனே! உலகம் உந்தன் கீழே
தீரனே! நீ நினைத்தாலே!

மயக்கமா? அசதியா? 
உன் விழித் தூக்கம் நான் ஆகவா?
உனை வழி நடத்தியே 
இணை என்று மாறட்டுமா?

தடைகளை தகர்த்திந்த
மலைகளை நகர்த்திடப் பார்க்கின்றேன் 
உனைக் காண...
விழும் இந்த அருவியை
சடையனின் சடையென நான் இங்கே எதிர்க்கின்றேன்
உன் பூமுகம் அதைக் காணவே
இப்பூமி ரெண்டாக நான் பிளக்கின்றேன்!

வீரனே! உலகம் உந்தன் கீழே
தீரனே! நீ நினைத்தாலே!

உயரமாய் முளைத்து வா
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்!
சிறகுகள் முளைத்து வா 
வழி மீது விழி வைக்கிறேன்!

முயலும் உந்தன் மனதின் முன்னே
புயலும் வந்து கைகள் கட்டும்
இயலும் என இதயம் கர்ஜிக்கும்
அதை எட்டுத் திக்கும்!

மலைகள் உந்தன் தோளைக் கண்டு தான்
பொறாமை கொள்ளுதே!

அருவி உந்தன் வேகத்தை
விழி விரித்துப் பார்க்கின்றதே!

இமைத்திடா உன் 
விழிகளில் தீ
கடந்து போ நீ
மலைகள் தாவி

வீரனே 
ஊரனே 
உலகம் உந்தன் கீழே 
எனது தேகம் இங்கே! 
தீரனே 
மாரனே 
நீ நினைத்தாலே! 
உன் விரல் எங்கே? 

Baahubal - Theerane

Followers