Pages

Search This Blog

Wednesday, July 8, 2015

புறம்போக்கு - ஒரே ஒரு முறை பார்த்திடு

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்

முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்

முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

நதியில் விழுந்து
தள்ளாடும் இலைகள் ஆவோம்

நதியின் போக்கில்
அன்பே வா மிதந்து போவோம்

நீ என்னை புதிதாய் பார்ப்பதும்
நான் உன்னை மெதுவாய் ஈர்ப்பதும்

நம் கைகள் ஒன்றாய் கோர்ப்பதும்
நம் நெஞ்சம் எங்கோ மிதப்பதும்

என்றோ எங்கோ யாரோ எழுதிய
காதல் காவியம்

ஏனோ நானும் தூங்கும் போதும்
உந்தன் ஞாபகம்

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன

புதிய உலகில்
கை கோர்த்து கூட்டிப் போனாய்

இதயக் கதவில்
கை ரேகை வைத்துப் போனாய்

ஓ பெண்ணே உன் நெருக்கம் பிடிக்குதே
உன் சுவாசம் என்னை எரிக்குதே

உன்னாலே கால்கள் பறக்குதே
வெண் மேகம் தலையில் இடிக்குதே

எது வரை போகும் அது வரை இந்த
பாதை நீளட்டுமே

எதிரினில் உந்தன் குரலினை கேட்கும்
போதை தொடரட்டுமே

பெண்ணே நீ இன்பம் என்பதா
பொல்லாத துன்பம் என்பதா

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு

வேறென்ன வேண்டும் வேண்டும்
முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

Purampokku - Orae Oru Murai

Followers