Pages

Search This Blog

Tuesday, January 29, 2019

குரு சிஷ்யன் - ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு


அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது

ஏ.. கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி அது செல்லாதடி

ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே

அதைச் சொல்லாதே சொர்ணக் கிளியே

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு
சொல்லிடு சொல்லிடு எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா


துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே.. ஹோய்
துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே

ஊர்க்காவலா நான் உன் காதலி
நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்
காதல் கிளி எந்தன் காவல் உண்டு
சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று

பாமாவுக்கு நான் கண்ணனடி
நல்ல மாமி வீட்டு மகராஜனடி
என்னைச் சீண்டாதே செல்லக் கிளியே

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு

அட சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு

என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா

சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு

அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு



Guru Sishyan - Jingidi Jingidi

Friday, January 25, 2019

என்னவளே - ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வழியிருக்கு நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே

காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை
பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே

வெட்டோடு பொருந்தும் வார்த்தை எதுவென்று தாய் மொழி அறியும்
நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை எதுவென்று யாருக்கு தெரியும்
வலி போக எந்தன் பாடல் வார்த்தை கொண்டு வரும்

யாருக்கு மாலைகள் ஆவதென்று பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை
யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை

விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே
போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு

எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்கை போல எண்ணங்கள் வாழ்வதும் துயரமில்லை

ரோஜாவின் கண்ணீர் தானே அத்தராய் வாசம் கொள்ளும்
கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்

பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களாய் நம்பி வாழ்வதில்லை
உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் காதல் வலி அன்பு என்றும் காய்வதில்லை

உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே
அண்டம் மறையும் அன்பே நித்தியமே

எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு
ஏற்றிக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு

நீர் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க
கல்யாண மாலை நனைத்த கண்ணீர் துளி வாழ்க

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வழியிருக்கு நெஞ்சே



Ennavale - Ovvoru Padalilum

என்னவளே - அடி காதல் என்பது தூங்கும் மிருகம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்
சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்

அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு
வெளியே குதித்துவிடும்

கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும்
காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே

பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சர சர ஒசையில்
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே

ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா
இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா

நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்
கொஞ்சம் வலிமை சேர்க்க வாமா

கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

காதல் மிருகம் என்பது
ரத்தம் சதையா கேட்குது
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது

மீண்டும் மிருகம் தூங்கவே
காடா மலையா கேட்குது
இடுப்பில் உன் சேலை கொண்ட
மடிப்பொன்று கேட்குது

மிருகம் தவிக்குதே வழி சொல்லவா
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா

மடி தாங்கி கொடுக்க மெல்ல தடவி கொடுக்க
அது தூங்கி போகும் அல்லவா

கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்

அந்த வேளை வந்ததும்
விஸ்வருபம் கொண்டு வெளியே குதித்துவிடும்

கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா



Ennavale - Adi Kadhal Enbathu

என்னவளே - சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

புயல் வந்து மையம் கொண்டால்
பூவில் இதழில் புன்னகை இருக்கு

உள்ளம் பார்க்கும் பார்வை தானே
இன்பம் என்பது

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

எந்த பூவிலும் தேன் துளி உண்டு
எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு

வாடி கிடக்க வருந்தி துடிக்க
வண்டுக்கு நேரமில்லையே

இருட்டை பார்த்து மலைப்பது மடமை
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை

ஆதவன் செய்யும் வேலை
தன்னை அகலும் செய்து விடும் மண்ணில்

எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி
அழுவது கிடையாது

உன் நெஞ்சிலே சாந்தி கொள்
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது
வாழும் ஆளை சார்ந்தது
வாழ்க்கை என்பது

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

பூத்து சிரிக்கும் பூக்களிலோடு
பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு

வானம் பொழியும் மழையின் ஷவரில்
நாளும் நீராடு

உன்னை கடந்து போகிற போது
ஊட்டி மேகம் திருடி கொண்டோடு

பூவை உடைக்கும் காற்றை போல
புகுந்து விளையாடு

இந்த ஜீவிதம் ஆனந்தம்
கவலைகள் என்று ஒன்று கிடையாது

வெண்ணிலா தேயலாம் வெளிச்சத்தை
வெட்டி கொல்ல முடியாது
மனித ராசி ஒன்று தான் சிரிக்க தெரிந்தது

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

புயல் வந்து மையம் கொண்டால்
பூவில் இதழில் புன்னகை இருக்கு

உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது



Ennavale - Chinna Chinna Sugangal

என்னவளே - கொத்து கொத்தா டாலர் மலை

கொத்து கொத்தா டாலர் மலை
கொட்டப் போகுதடா

காட்டு கட்டை கரன்சி மரம்
காய்க்கப் போகுதடா

வெள்ளி நிலா விலை என்ன கேட்டு
லட்சத்தில் இன்சூர் பண்ணு

ஓஷோனில் துளை வந்து சேர்ந்தால்
வான் வெளியை ரிபேர் பண்ணு

எங்கள் பார்ட்னர் பில் கேட்ஸ் தான்
எங்கள் ஹெட் ஸோர்ஸ் வைட் ஹௌஸ் தான்

ஓ ய்யா ஓ ய்யா உலகம் எங்கள் வசந்தான்

கொத்து கொத்தா டாலர் மலை
கொட்டப் போகுதடா

காட்டு கட்டை கரன்சி மரம்
காய்க்கப் போகுதடா

அட்லாண்டிக் கடலை கேள்
சொந்தத்தில் வாங்குவோம்

ஸ்விம்மிங்க் பூல் ஆக்குவோம்
அதில் மீனோடு நீராடுவோம்

டோக்கியோவில் லன்ச் தான்
டொரொண்டோவில் டின்னெர் தான்
லோஸ் ஏன்ஜல்ஸ் தூக்கம் தான்
நாம் முப்போதும் கொண்டாடுவோம்

காசுண்டு என்றால்
உலகம் தலை கீழ் ஆகும்

காசில்லை என்றால்
தலையே தலை கீழ் ஆகும்

உன் பேங்கிலே உள்ள பேலென்ஸ் தான்
இறுதி வரை உறவு ஆகும்

மனமே மனமே முதலும் முடிவும் பணமே

கடல் நீரை மாற்றியே
குடி நீராய் ஆக்கலாம்

ராஜஸ்தான் பாலையை
தஞ்சாவூர் நாம் ஆக்கலாம்

ஆகாய நிலாவையே
சேட்டிலைட்டாய் மாற்றலாம்

அங்குள்ள ஃபிகரக்கூ
எஸ் டீ டீ நாம் பேசலாம்

பூலோம் தீர்ந்ததா
செவ்வாய் கிரகம் வாங்கு

செவ்வாயும் தீர்ந்தால்
நீ இன்னோர் கிரகம் வாங்கு

உன் கையிலே காசுள்ளதா
பெண்ணும் மண்ணும் வசமாகும்

மனமே மனமே முதலும் முடிவும் பணமே

கொத்து கொத்தா டாலர் மலை
கொட்டப் போகுதடா

காட்டு கட்டை கரன்சி மரம்
காய்க்கப் போகுதடா

வெள்ளி நிலா விலை என்ன கேட்டு
லட்சத்தில் இன்சூர் பண்ணு

ஓஷோனில் துளை வந்து சேர்ந்தால்
வான் வெளியை ரிபேர் பண்ணு

எங்கள் பார்ட்னர் பில் கேட்ஸ் தான்
எங்கள் ஹெட் ஸோர்ஸ் வைட் ஹௌஸ் தான்

ஓ ய்யா ஓ ய்யா உலகம் எங்கள் வசந்தான்



Ennavale - Kothu Kottai

என்னவளே - ர ர ராஜா குமரா ரா ரா

ர ர ர ர
ர ர ராஜா குமரா ரா ரா
ரா ரா உன் ரசியையின் வாசல் ரா ரா

காதல் என்பது நீ வாழும் ஊரா
காமன் என்பது நீ கொண்ட பேரா

உன் சாலை ஓரம்
காதல் தேரா

ஓடோடி வாராய்
பேரை மீரா
ர ர ர ர
ர ர

ர ர ராஜா குமாரி ரா ரா
ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா
ரா ரா

பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்
பெண்ணின் உணர்வுகள் மதிப்பாயா

பெண்ணே உந்தன் நிழலும்தரையில் விழும் முன்னே
மடியில் ஏந்திட மாட்டேனா

ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளே
என்னைக் குத்தும் குத்தும்

கண்ணே நான் வைப்பேன் நான் காயத்தின் மேல்
முத்தம் முத்தம்

உன்னால் தான் கண்டேன்
கல்லில் ஈரம்

ரா ரா
என்னவளே நீ வானம் வந்து விட்டு வந்ததென்ன
என்னவளே என்ன் நெஞ்சை வந்து தொட்ட தின்று
ராஜா குமரா ராஜா குமரா

ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு
கண்டு பிடிப்பது ஆண்கள் பொறுப்பு

உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து
கனவு காண்பது என் பொறுப்பு

உதிருவாகும் ஒரு பெண்ணின்
சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு

கண்ணே அதை கண்டு நான்
நாளும் செய்வேன் தொண்டு தொண்டு

உன் வார்த்தை போதும்
நான் வாழ்வேன் இன்று

ர ர ர ர
ர ர ராஜா குமரா ரா ரா
ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா

காதல் என்பது நீ வாழும் ஊரா
காமன் என்பது நான் கொண்டப்பேரா

உன் சாலை ஓரம்
காதல் தேரா

ஓடோடி வாராய்
பேரை மீரா

ர ர ராஜா குமரா ரா ரா
ரா ரா



Ennavale - Ra Ra Rajakumara

ஈரம் - தரை இறங்கிய பறவை போலவே

தரை இறங்கிய பறவை போலவே

மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே

கரை ஒதுக்கிய நுரையைப் போலவே

என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே

தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்

எடை எடை மிகக்குறைந்து போகிறேன்

அட இது என்ன உடைந்து சேர்கிறேன்

நகத்தின் நுனியும் சிலிர்த்து விடக்கண்டேன்

நதியில் மிதக்கும் ஓடம் என

வானில் அலையும் மேகம் என

மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்

இதுவும் புதிய உணர்வு அல்லவா

காதல் பேச்சில் பொய் பூசுவாய்

மயங்கும் வேளை மை பூசுவாய்

விலக நினைதால் கண் வீசுவாய்

தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன் தவித்தேன்



Eeram - Tharai Erangiya

Followers