Pages

Search This Blog

Friday, January 25, 2019

என்னவளே - அடி காதல் என்பது தூங்கும் மிருகம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்
சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்

அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு
வெளியே குதித்துவிடும்

கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும்
காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே

பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சர சர ஒசையில்
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே

ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா
இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா

நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்
கொஞ்சம் வலிமை சேர்க்க வாமா

கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

காதல் மிருகம் என்பது
ரத்தம் சதையா கேட்குது
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது

மீண்டும் மிருகம் தூங்கவே
காடா மலையா கேட்குது
இடுப்பில் உன் சேலை கொண்ட
மடிப்பொன்று கேட்குது

மிருகம் தவிக்குதே வழி சொல்லவா
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா

மடி தாங்கி கொடுக்க மெல்ல தடவி கொடுக்க
அது தூங்கி போகும் அல்லவா

கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்

அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்

அந்த வேளை வந்ததும்
விஸ்வருபம் கொண்டு வெளியே குதித்துவிடும்

கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா



Ennavale - Adi Kadhal Enbathu

Followers