Pages

Search This Blog

Thursday, January 3, 2019

பூலோகம் - வாங்கி வந்த பூ மால

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபதாம் வருடம்...
எங்கள் சென்னை மா நகரினிலே...
செண்ட் ஜார்ஜ் கோட்டை அருகினிலே
ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து..
பிரபல பாக்ஸிங் வாத்தியாராய் வாழ்ந்து
இன்று தானாக முடிவு தேடி...
வாழாமல் போனதேனோ...
ஐயா ரத்தினம் ஐயா...
நீ சாகும் போது யாரைச் சொல்லி 
அழைத்தாய் ஐயா...

வாங்கி வந்த பூ மால தான் ஐயா
வாத்தியாரே உன் மேல தான்

வாங்கி வந்த பூ மால தான் ஓ ஐயா
வாத்தியாரே உன் மேல தான்
குத்து சண்டையில அப்பன் புள்ளையா
கட்டிப் புரண்டோம் மாஸ்டர்
இப்ப ஒட்ட வச்சது எங்களை ஏனோ
கண்ணீரு அஞ்சலி போஸ்டர்
ரத்தினம் மாஸ்டரு ரத்தினம் மாஸ்டரு 
எங்க ரத்தமும் சதையுமாயிருந்த
ரத்தினம் மாஸ்டரு 

வாங்கி வந்த பூ மால தான் ஐயா
வாத்தியாரே உன் மேல தான்

திருலக்கேணி மார்க்கெட்டுல 
தவுலத்தா நீ நடந்தா
ரிஸ்கான ரௌடிசெல்லாம் 
சலாம் போட்டு போவான்
போலிஸ் வேல ரயில்வே வேல
ஸ்போர்ட்ஸ் மேனு கோட்டால
எவ்வளோ ஸ்டுடன்ஸுக்கு 
கெடச்சதிங்கு உன்னால

எக்கச்சக வாத்தியார ஸ்கூல்ல பாத்திருக்கேன்
உன்னப் போல கெத்து இல்ல
கத்து தந்த வித்தைகள

ரத்தினம் மாஸ்டரு ரத்தினம் மாஸ்டரு 
எங்க ரத்தமும் சதையுமாயிருந்த
ரத்தினம் மாஸ்டரு 

வாங்கி வந்த பூ மால தான் ஓ ஐயா
வாத்தியாரே உன் மேல தான்

பாசத்தோட வளத்த புள்ள பாட ஓல பின்னுதையா
பச்ச மூங்கில் வெட்டுதையா
கொள்ளி போட கத்துதையா
மீளாத பயணத்துக்கு அழகாக பல்லக்கத் தான்
அழுகைய அடக்கிக்கிட்டு 
அலங்காரம் பண்ணுதையா
மால போட்டு படுக்க வச்சி
மஞ்சளோட குங்குமம் வச்சி
ஒத்த ரூபா நாணயத்த 
நெத்தியில தானே ஒட்ட வச்சி
மேட போட்டு குந்த வச்சி
முன்னால ஒரு மைக்க வச்சி
இந்த கானா தாஸ உன் பெரும 
பாட சொன்னான் பூலோகம்
தேங்ஸு பூலோகம்

ஆட்டக் கணக்குடா விதி போட்ட கணக்குடா
நண்பா கூட்டிப் பெருக்கி கழிச்சி பாத்தா
பூட்டக் கணக்குடா வெறும் ஓட்டக் கணக்குடா

குடும்பம் கூத்தியாருன்னு...
ஒண்ணுமில்லாம வாழ்ந்திட்டாரு...
இந்த வித்தைக்கெல்லாம் இனிமே நாதி யாரு...
பூலோகம் தான் வாத்தியாரு...



Bhooloham - Vaangi Vantha

பூலோகம் - இவன் சென்னை மா நகர் வீரன்

இவன் சென்னை மா நகர் வீரன்
சிங்கார வேலன் பேரன்
பெரும் சொத்து சேர்க்க மாட்டான்
தன்னை வித்து சேர்க்க மாட்டான்

இவன் சென்னை மா நகர் வீரன்
சிங்கார வேலன் பேரன்
பெரும் சொத்து சேர்க்க மாட்டான்
தன்னை வித்து சேர்க்க மாட்டான்
வலை வீசும் வீடியோவின் 
விலை பேசும் மீடியாவின்
தூண்டிற் புழு ஆக மாட்டான்
இந்தியா உங்கள் சந்தையா
மக்களா இல்லை மந்தையா
நாடகம் இல்லை ஊடகம்
உண்மையே அதன் ஆயுதம் 
ஓ... ஓ... ஓ... ஓ... 

சோப்பு சீப்பின் பேராலே ஒரு யுத்தம் தானே
நோயை விற்கும் கேமரா இவன் லென்ஸு தானே
ஊட்டச் சத்து மாவென்பான்
சாப்பிட்டா தான் மூளையாம்
நாட்டை மார்க்கெட்டாக்கியே விளையாடுறாண்டா
மாடல் பாத்து ஓடாதே வாழ்க்கை உன்னோடதே
காரு வாங்க அழைப்பார் ஏது பெட்ரோல் டீசலு
ஷாம்பூ கூந்தல் ரோப்பாய் மாறி 
காரை இழுக்குதாம்
சென்டை பூசிக் கொண்டால் 
எந்த பெண்ணும் ஈஸியாம்
சாஹசங்களே விளம்பரமா
பாரம்பரியம் தகர்ந்திடுமா...

இந்தியா உங்கள் சந்தையா
மக்களா இல்லை மந்தையா
நாடகம் இல்லை ஊடகம்
உண்மையே அதன் ஆயுதம் 

ஓ... ஓ... ஓ... ஓ... 

வியாபாரம் நாடாளுதாம்
வர்த்தக விளம்பர சூதாட்டம் தான்
ஹே கல்வித் துறை வியாபாரம்
ஆஸ்பத்திரி வியாபாரம் பந்நாட்டு வியாபாரம்
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
பண்டம் விற்க வந்துட்டாண்டா
உள் நாடே தேங்கிப் போச்சேடா

இந்த உலகமே வியாபாரம் தான்
மதக் கலவரம் வியாபாரம் தான்
பக்தி பரவசம் வியாபாரம் தான்
நாட்டில் இலவச வியாபாரம் தான்



Bhooloham - Ivan Chennai

பெங்களூர் நாட்கள் - மல்லிகையில் ஒரு மாலை

மல்லிகையில் ஒரு மாலை

தங்கச்சரிகையில் ஒரு சேலை

ஆ….. மல்லிகையில் ஒரு மாலை

தங்கச்சரிகையில் ஒரு சேலை

பூவொன்றை பூட்டி வைக்கத்தான்……… ஓ……

கல்யாணம் கண்டுபிடித்தான்

தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா



அடடா நீ அழகி என்று

ஆர்ப்பரிப்பான் உன் கணவன்

வெட்கத்தில் நீயும் கேட்பாய் நிஜமா என்று



ஓ……… கதை கொஞ்சம் மாறும்போது

வார்த்தைகளெல்லாம் பாழாகும்

வாழ்வே ஓர் போர்க்களமாகும்

ஹே… ஹே… நீ மோதிட வேண்டும்



தாலி உன் தாலி

அது உன்னைக் கட்டும் வேலி

கூடைக்குள்ளே மூச்சுமுட்டும் கல்யாணக் கோழி

தோழா என் தோழா நான் ஆகாயத்தின் மேலே

பறந்துகொண்டே தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே

அ…….



அம்மி மிதிக்கிற வாழ்க்கையெல்லாம்

நினைப்பதுபோல் இருப்பதில்லை

சிறகினை அடகுவைத்தால்

பறவையின் வாழ்வில் சுகம் இல்லை



அ…

அணைப்பதும் அடங்கி நின்று

தவிப்பதும் ஓர் மயக்கம்தானே

நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொர்க்கம்



தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா



மல்லிகையில் ஒரு மாலை

தங்கச்சரிகையில் ஒரு சேலை

ஆ….. மல்லிகையில் ஒரு மாலை

தங்கச்சரிகையில் ஒரு சேலை

பூவொன்றை பூட்டி வைக்கத்தான்……… ஓ……

கல்யாணம் கண்டுபிடித்தான்

தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா




Bangalore Naatkal - Thodakkam Mangalyam

பெங்களூர் நாட்கள் - என் விழியின் கனவு உன் சொந்தம்

என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை!
நீ காணாதே - அதில்
பிழை தேடாதே!

என் சிறிய உலகில்
நீ யாரும் இல்லை!
ஏன் கேட்காதே - அதில்
அடி வைக்காதே!

என்னுள் நானாய் பாடும்
பாடல் ஒட்டுக் கேட்பதேன்?
நெஞ்சில் முணுமுணுப்பதேன்?
என் வாழ்வை வாழ்வதேன்?

எந்தன் பசி எந்தன் தாகம் கூட
உனைக் கேட்டு வரவேண்டுமா?
நீ எந்தன் சுவாசமா?

மீண்டும் மீண்டும் என் மேல்
பூ வீசிப் போகிறாய்...
ஏதோ நீ சொல்லப் பார்க்கிறாயோ?

எந்தன் கண்ணில்
உந்தன் கண்ணீர்
நான் ஏந்த முயல்கின்றேன்!

உன் சோகம்
என் நெஞ்சில்
ஏந்திப் போகிறேன் அது ஏனடா?
நான் ஏன் நீயாகிறேன்?

ஆயினும் நான் நானே!
என்னில் உனைக் காணத்தானே
நீயானேனே!

நான் ஏன்?

அருகே நீ தூரமாய்...
தினமும் கொன்றாயடி!
யார் யாரோ நாம்
என்றாயடி! 

நெஞ்சைக் கொட்டி
நான் தீர்த்தேன்
கேளாமல்... நீ சென்றாய்!

என் மேல் காதல்
தோன்றாதா?
பேசாமல் நீ வதைக்கிறாய்!

என் காதல்... நீ காண...
மாட்டாயா? மா...ட்டா...யா?



Bangalore Naatkal - En Vizhiyin Kanavu

பெங்களூர் நாட்கள் - நான் மாட்டிக்கொண்டேன்

நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

நானே மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன் - உன்
குரலுக்குள் இனிமை போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்

உந்தன் சுருள்முடி இருளிலே...
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்!

பார்வையில்... உன் வார்த்தையில்

நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
தமிழுக்குள் போதை போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

வேண்டி மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கவிதைக்குள் குழப்பம் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

♀♂ 
எல்லை மீறாமலே
சிறு நெருக்கம் நெருக்கம்
கைகள் தீண்டாமலே
உன் இதயம் திறக்கும்!
♂ 
இசையாய் விரிந்தாய்
நிறமாய் இறைந்தாய்
மணமாய் நிறைந்தாய்
சுவையாய் கரைந்தாய்

உன்னுள்ளே செல்லச் செல்ல
இன்னும் உன்னைப் பிடிக்கையிலே
இவ்வாறே நான் வாழ்ந்தால் போதாதா?

என் நெஞ்சின் மேடை இங்கே
உன்னை ஆட அழைக்கையிலே
கால்கள் வேண்டாம் காதல் போதாதா?

நான் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கோவில் உள் கடவுள் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

தானாய் மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
கர்ப்பத்தில் சிசுவைப் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

உந்தன் சுருள்முடி இருளிலே...
கண்ணைக் கட்டிக்கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டுபிடிக்கிறேன்!

பார்வையில்... உன் வார்த்தையில்

ஹோ மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
மண்டைக்குள் பாடல் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்

மாட்டி மாட்டிக்கொண்டேன்
உனில் மாட்டிக்கொண்டேன்
ஆசைக்குள் ஏக்கம் போல
உன்னில் மாட்டிக்கொண்டேன்



Bangalore Naatkal - Naan Maati Konden

அழகிய தீயே - விழிகளின் அருகினில் வானம்

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே

பூ போன்ற கன்னி தேன்
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளி துளியாய் சிதறியதே
ஐம்புலனும், என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யே

கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இனி நில் என ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா
உரைத்திடவா? மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யே....

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே



Azhagiya Theeye - Vizhigalin Aruginil Vaanam

அழகர்சாமியின் குதிரை - பூவக்கேளு காத்தக்கேளு

பூவக்கேளு
காத்தக்கேளு

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
தீராததே ஆச
வேறென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே
எந்தன் உயிரும்
நீயே நீயே

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வெச்சேன் முந்தநேத்து
தாலி கட்ட நெந்துகிட்டு
நா தவிச்சிருந்தேன் வழிய பாத்து

நீ போகும் வழியில்
நிழல் நானாகி விழவா
தூங்காத விழியில்
துணை சேர்ந்தாயே மெதுவா

ஒன்னும் புரியாம
தாளம் தட்டுரேனே
சொல்லதெரியாம
வாய கட்டுரேனே

ஆக மொத்தம் காதல் இது சரி தானே

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்
பூவக்கேளு
காத்தக்கேளு
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

ஏறிடிச்சு காதல் பித்து
ஆ ஹா செவந்து போச்சு மல்லி மொட்டு
ஆச ரொம்ப முத்தி போச்சு
வா ஆடி பாப்போம் ஜல்லிக்கட்டு

வேண்டாத தனிம
இத யாரோடு உணர
தீண்டாத கொடும
சுடும் தீயாகி படர

சாதி என்ன சாதி
தேவ இல்ல மானே
காதலுக்கு தேவ
அன்பு மட்டும்தானே

ஆக மொத்தம் காதல் இது சரி தானே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்
மான கேளு
மயில கேளு
மால கட்ட சொல்லும்

தீராததே ஆச
வேரென்ன நான் பேச
என்னோடு நீ
பாதி இல்லையே
நீ இல்லையேல்
நானும் பொம்மையே

எந்தன் உயிரும்
நீயே நீயே
பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்

பூவக்கேளு
காத்தக்கேளு

பூவக்கேளு
காத்தக்கேளு
என்ன பத்தி சொல்லும்





Azhagarsamiyin Kuthirai - Poovakkelu

Followers