Pages

Search This Blog

Thursday, November 29, 2018

தென்மேற்குப் பருவக்காற்று - ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா

ஓ…அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ
அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ
முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக
முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக
கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும்
கிறுக்கேத்தும் மாம்பழ சொல்லு மறுநாளு மாறிவிடும்
நான் பொம்பள கிறுக்குல வல்லன்
என் புத்தியில் வேறொண்ணும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல
நீ வெறும் வாய மெல்லாத வெளையாட்டுல

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா

ஆண்டிப்பட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம்
ஆக மொத்தம் ஒன்னக்கண்டு ஆடிப்போச்சு நெஞ்சம்
பித்தம் கொஞ்சம் கூடிப்போனா இப்படித்தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட சாத்திவையி கொஞ்சம்
கொடியோடும் சக்கரவள்ளி தெரியாம கெழங்கு வைக்கும்
அதுபோல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும்
நீ பட்டுன்னு முன்ன வந்து நில்லு
எம் பொட்டுல அடிச்சி நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்குய்யா முள்ளு
அட நாவுக்கு தூரமில்ல பல்லு
நான் முடிபோட ரெடிதான்டி முடிவா சொல்லு

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி



Thenmerku Paruvakaatru - Yedi Kallachi Enna Theriyalaiya

மெர்க்குரி பூக்கள் - சொல்ல வார்த்தைகள் இல்லை சொல்லாமல் காதலும்

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே உயிரே

பேச ஞாபகம் இல்லை
பேசாமல் போகவும் இல்லை
என்ன செய்ய ஏது செய்ய உள்ளம் கிடந்து அலைகிறதே

கணவா கணவா என் ஆசை கணவா
சேர்ந்துக்கொண்டேன் இதயம் துடிக்கிறதே

கனவா கனவாணைது காதல் கனவா
கிள்ளிக்கொண்டேன் எனக்கும் வலிக்கிறதே

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே உயிரே

உன்னை விலகும் ஒவ்வொரு நொடியும் உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை கணமும் என்னில் ததும்புகிறேன்

உன்னை விலகும் ஒவ்வொரு நொடியும் உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை கணமும் என்னில் ததும்புகிறேன்
நேசிக்கிறேன் உன்னை என்னை அறியாமலே
யோசிக்கிறேன் இதைத்தான் நானும் புரியாமலே
நெஞ்சோடு கலகம் தீராததா
அன்பான உலகம் கை சேருமா
கண்ணோரங்கள் கொல்ல புது மின்சாரங்கள் செல்ல
இன்னும் என்ன சொல்ல நான் என்னைத் தந்தேன் மெல்ல

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே அடியே

கண்கள் திறந்து கண்ணிமை திறந்து கண்டு கலந்ததென்ன
என்னை மறந்து உன்னையும் மறந்து உயிர் கரைந்ததென்ன

உள்ளம் கடந்து உள்ளத்தைக் கடந்து வந்த உணர்வு என்ன
நெஞ்சை அளந்து நேசத்தை அளந்து நின்று நினைத்ததென்ன
கோடுகளை இணைத்தால் கோலம் உருவாகுமே
இணைத்திடவே நல்ல காலம் உருவாகுமே
விண்ணொடும் துருவம் சேர்ந்திடுமே
உன்னோடு இதயம் கலந்திடுமே
அன்பே அன்பே என்று உனைத்தாலாட்டும் நாள் என்று
ஆகாயமும் நின்று மலர் பூத்தூவுமே அன்று

யாரோ நெஞ்சுக்குள் வந்து ஒரு லட்சம் வயலின்களை
மெல்ல மெல்ல இசைப்பது போல் இருக்கிறதே அன்பே

கணவா கணவா என் ஆசை கணவா
சேர்ந்துக்கொண்டேன் இதயம் துடிக்கிறதே

யாரோ நெஞ்சுக்குள் வந்து ஒரு லட்சம் வயலின்களை
மெல்ல மெல்ல ராகத்தோடு இசைப்பது போல் இருக்கிறதே



Mercury Pookal - Solla Vaarthaigal Illai Sollaamal Kadhalum Illai

தென்றல் வரும் தெரு - புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
நிலவு நீந்தும் வேளையில் உறவைத் தேடி பாடுதோ
உன்னைத்தான் உன்னைத்தான் அழைத்தாளோ
சொல்லத்தான் சொல்லத்தான் தவித்தாளோ
புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ
காலடி சத்தம் தந்ததே நெஞ்சினில் முத்தம்
கொற்கையின் முத்து கொஞ்சுதே கிண்கிணி கொத்து
தேவதை என்று பாராட்ட சிந்தமிழ் சங்கம் கூடியதோ
காதலன் பேரை தாலாட்ட காவடிசிந்து பாடியதோ
உன்னைத்தான் அழைத்தாள் சொல்லத்தான் தவித்தாள்
தவித்…தா…ளோ

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ

வைகையின் ஓரம் மன்னவா நீ வரும் நேரம்
என்ன உன் கண்கள் நொந்ததே பங்குனி திங்கள்
ஜென்மங்கள் ஏழும் போதாது தேவனின் மார்பில் பூ தொடுக்க
தேகமும் ஒன்று போதாது தேவனின் கைகள் தேன் எடுக்க
உன்னைத்தான் அழைத்தாள் சொல்லத்தான் தவித்தாள்
தவித்…தா…ளோ

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
நிலவு நீந்தும் வேளையில் உறவைத் தேடி பாடுதோ
உன்னைத்தான் உன்னைத்தான் அழைத்தாளோ
சொல்லத்தான் சொல்லத்தான் தவித்தாளோ
புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ



Thendral Varum Theru - Puthiya Paravai Paranthathey

மேட்டுக்குடி - ஏய் மானாமதுர குண்டுமல்லிய

ஏய் மானாமதுர குண்டுமல்லிய
வாடாம நா தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஏய் குண்டுமல்லிகப்பூவ சூட்டுவ
பக்கம் வந்து நீ பல்ல காட்டுவ
போ மாமா போ மாமா போ மாமா
போ மாமா போ மாமா போ மாமா

ஏய் சொக்கம்பட்டி சேல ஒண்ணு
வாங்கித் தாறேன் வாரியா
ராத்திரி ஆனா திருப்பி கேப்பே
வேணாம் மாமா போய்யா போய்யா

மானாமதுர குண்டுமல்லிய
வாடாம நா தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஏய் டூரிங் டாக்கீஸ் கூட்டிப்போறேன்
கோலி சோடா வாங்கித்தாறேன்
பக்கத்துல உக்காந்துதான்
சினிமா பாப்போமா
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

இருட்டுல எங்க படத்த பாப்பே
இடுப்புல என்ன கிள்ளி பாப்ப
பத்துமணி ஆட்டம் எல்லாம்
வேணாம் போ மாமா
போ மாமா போ மாமா போ மாமா

அடி பாக்காத இடம் ஒண்ணு
பாப்போமா சொல்லு
நான் பழகாத இடத்துக்கு
வரமாட்டேன் தள்ளி நில்லு

ஏய் மானாமதுர குண்டுமல்லிய
வாடாம நா தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஏய் கையக்காட்டு வளையல் மாட்ட
காலக்காட்டு கொலுசு மாட்ட
ஆச வச்சி வாங்கி வந்தேன்
போட்டுக்க நீ வாம்மா’
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

கையத்தொட்டு காலத்தொட்டு
அங்க இங்க மெல்லத்தொட்டு
கட்டிலுக்கு குறிய வப்ப
வேணாம் போ மாமா
போ மாமா போ மாமா போ மாமா

அடி நீ போனா எனக்குண்டு
ஏராளம் ஆளு
அந்த கரகாட்ட வனஜாட்ட
என்னப்பத்தி கேளு கேளு

ஏய் மானாமதுர குண்டுமல்லிய
வாடிப்போகும் முன் தலையில் சூட்டணும்
வா மாமா வா மாமா வா மாமா
வா மாமா வா மாமா வா மாமா

அட வேணாம் போம்மா
ஆசையெல்லாம் உன்னப்பாத்தா தோணுமா
சும்மா கொஞ்சம் சீண்டிப்பாத்தேன்
வம்புகள் வேணாம் வா வா மாமா

மானாமதுர குண்டுமல்லிய
வாடிப்போகும் முன் தலையில் சூட்டணும்
வா மாமா வா மாமா வா மாமா
வா மாமா வா மாமா வா மாமா
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
வா மாமா வா மாமா வா மாமா



Mettukudi - Mana Madurai

Wednesday, November 28, 2018

உனக்காகவே வாழ்கிறேன் - கண்ணா உனைத்தேடுகிறேன் வா

கண்ணா…ஆ கண்ணா…ஆ ஆ…கண்ணா

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
கண்ணீர்க்குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
கண்ணீர்க்குயில் பாடுகிறேன் வா

ஏனிந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா
என் பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னைத்தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
கண்ணீர்க்குயில் பாடுகிறேன் வா

கண்ணே உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே இனி சோகமில்லை

கண்ணே உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா

சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா
கங்கை நீர் காயக்கூடும் கண்ணீர் அது காயுமா
சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா
ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகம் இல்லையே

கண்ணே உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே இனி சோகமில்லை

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா



Unakkagave Vazhkiren - Kanna Unnai Thedukiren Vaa

தீர்க்க சுமங்கலி - மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
எந்நேரமும் உன்னாசை போல்
பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

 வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் (2)
திங்கள் மேனியை தொட்டு தாலட்டுது
குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி
கொஞ்சிப்  பேசியே அன்பை பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில்
உன் தேவை என்னவோ 

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ.........

பொன் மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்
மஞ்சள் குங்குமம்  என்றும்  நீ தந்தது
ஓராயிரம் இன்பக்காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்க்கம் தான்
நம் உள்ளம் வெள்ளம் தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடு தான் நான் தேடி கொண்டது

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'
எந்நேரமும் உன்னாசை போல்
பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..........



Dheerga Sumangali - Malligai en Mannan Mayankum

டிக் டிக் டிக்(1981) - இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்

இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
ஆடைகூட பாரமாகும் ஹே பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம் பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்

ஆஆஆ…நாதிர்தனா திரனனா திரனனா திரனனா நாதிர்தனனனா
நாதிர்தனா திரனனா திரனனா திரனனா நாதிர்தனனனா
நாதிர்தனா நாதிர்தனா நாதிர்தனா…நாதிர்தனா நாதிர்தனா நாதிர்தனா
நாதிர்தனா திர்தனா திர்தனா திர்திர்தனா
நா திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர்
நாதிர் திர்திர் நாதிர் திர்திர் நாதிர் திர்திர் நாதிர் திர்திர்
நாதிர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர்
திர்திரனா…திர்திரனா…திர்திரனா… திர்திரனா…திர்திரனா

பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே ஹோ அருவி நிமிராதோ
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே ஹோ அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே ஹோ ஓ ஓ ஓ
யாரும் வந்து நடக்காத சாலை நீயே ஹோ ஓ ஓ ஓ
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்கக் கண்டாளே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்

னா னனா…னா னனா னா…னா…னா…னா
னன னன னன னன னன னன னா…னா னனா…னா னனா

தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக்கண்டு கண்கள் கூசும் ஹோ ஓ ஓ ஓ
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும் ஹோ ஓ ஓ ஓ
பருவப்பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது

இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
ஆடைகூட பாரமாகும் ஹே பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம் பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்



Tik Tik Tik(1981) - Idhu Oru Nila Kaalam

Followers