Pages

Search This Blog

Tuesday, July 3, 2018

காதல் கவிதை - மச்சான் ஆளான நாள் முதலா யாரையும்

மச்சான் ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்
வேணான்னு சொல்லுறீங்களே  சும்மா வெறும் வாயை மெல்லுறீங்களே
ஆடியிலே கட்டிக்கிட்டா சித்திரைக்கு புள்ள வரும்
ஆகாது ஆகாது மச்சானே இது தோதான தை மாசம் வச்சானே
ஆகாது ஆகாது மச்சானே இது தோதான தை மாசம் வச்சானே

உன்னை நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்லை
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல
வேணாண்டி விட்டு விடுடி
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி
தாலி கட்டி கூடிக்கிட்டா சாமி குத்தம் ஆகுமின்னு
மேலூரு குறிக்காரன் சொன்னாண்டி
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்

புல்லறுக்க போகையில புள்ளக்குடி தண்ணியில
உன் முகத்தை பார்த்து புட்டேன் ஓடி வந்து சேர்ந்து புட்டேன்
என் பாசம் தெரியாது மாமா இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
என் பாசம் தெரியாது மாமா இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

கொல்லையில மாங்காய் மரம்  கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு
காவல்காரன் தூங்கயில கை அரிச்சு மாம்பழத்தை
அறியாம பறிச்சா தான் இனிக்கும்
அடி அதுக்குள்ளே கடிச்சா தான் ருசிக்கும்
அறியாம பறிச்சா தான் இனிக்கும்
அடி அதுக்குள்ளே கடிச்சா தான் ருசிக்கும்

பூ எடுத்து மாலை கட்டி ராசா
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா
உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன் ராசா என் ராசா

யம்மா உன்னை நான் கட்டிகிட எப்பவும் நெனச்சதில்லை
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல

காள கண்ணு வாங்கி கட்டி பால் கறக்க ஆசைப்பட்ட
கோழி குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்திக்கிட்ட
முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாது என் வாழ்க்கை தானே
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே அடி ஒட்டாது என் வாழ்க்கை தானே

ஒத்தைக்கொத்தை சண்டையினா ஓடி போற ஆம்பளை நீ
செத்து போன பாம்பை பார்த்து சத்தம் போட்ட வீரனும் நீ
நீ மட்டும் சரிதானா மாமா என் நெனப்பதான் நீ பாரு மாமா
நீ மட்டும் சரிதானா மாமா என் நெனப்பதான் நீ பாரு மாமா

உன் வாயை கொஞ்சம் மூடிக்கடி வாரேன்
நான் ஆம்பளை தான் வீரத்தை நீ பாரேன்
நான் நெனச்சா மலையை ஒடிப்பேன்
வாரேன் நான் வாரேன்

மச்சான் ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல
உன்னை நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்லை
வேணான்னு சொல்லுறீங்களே
அடி வேணாண்டி விட்டு விடுடி
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமடி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி
ஆகாது ஆகாது மச்சானே
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

Kaadhal Kavithai - Aalana Naal Mudhala


எதிரும் புதிரும் - தொட்டு தொட்டு பேசும் சுல்தானா

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு
இன்றுவரை சிக்கவில்லையே
என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே
டில்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே
பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே
ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே
அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே

சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்
புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா
முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா
ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா
ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா

சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே

Ethirum Pudhirum - Thottu Thottu Pesum


நேருக்கு நேர் - துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மாலை வந்து சேருமுன்னே
பிள்ளை வரலாம் எவர் கண்டார்
அத்து மீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

என் தூக்கத்தையும் நீ திருடலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
நீ கண்களைக் கைதும் செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மோகம் வந்தாள் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்
உன்னைவிட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

Nerrukku Ner - Thudikindra Kadhal


நேருக்கு நேர் - அவள் வருவாளா அவள் வருவாளா

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

(அவள் )

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா

(அவள் ..)

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

(அவள் .......)

Nerrukku Ner - Aval Varuvala


நேருக்கு நேர் - மனம் விரும்புதே உன்னை உன்னை மனம்

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்து இளமார்பில் ஒட்டியது ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே மனம் ஏங்குதே
மீண்டும் காண மனம் ஏங்குதே

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவை போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்று வரை நம்பலையே
என் காதலா என் காதலா
நீ வா நீ வா என் காதலா

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே

Nerrukku Ner - Manam Virumbuthae


ராஜா கைய வச்சா - மழை வருது மழை வருது குடை கொண்டு

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே 

இரவும் இல்லை 
பகலும் இல்லை
இணைந்த கையில் 
பிரிவும் இல்லை
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே
உறங்க வேண்டும் கண்ணா வா

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே

கடந்த காலம் 
மறந்து போவோம்
கரங்கள் சேர்த்து 
நடந்து போவோம்
உலகம் எங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
உலகம் எங்கும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்
இனிய ராகம் கேட்கும் வா

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே ஹோய்
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே 
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே



Raja Kaiya Vacha - Mazhai Varuthu

மறுபடியும் - ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

சின்ன பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளி ரதம் நான்
கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாப தேரெறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

சின்ன சிட்டு நான் ஒரு சிங்காரப்பூ நான்
தங்கத்தட்டு நான் நல்ல தாழம்பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீர் ஆடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமோய்



Marupadiyum - Aasa Athigam Vachu

Followers