Pages

Search This Blog

Friday, April 6, 2018

காதல் கோட்டை - வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!
வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

கண்ணு அழகுப் பெண்ணு காதலிக்க ஏத்தபொண்ணு
சென்ரை ரயிலுக்குள்ளே சிக்கிக்கிட்டாள் ஊட்டி பன்னு!

தடக் தடக்... டொடக் டொடக் ...

உன்னை நானும் பாத்த நேரம் ஆசையோட பேச வேணும்!
என்ன தேவை சின்னப் பொன்னே கேளம்மா
சிங்கப்பூரு சென்ரு சேலை சேர்த்துப்பட்டு அண்ணா சாலை
ரெண்டு வீடு வாங்கித் தாரேன் போதுமா?

ஊர் பார்க்கவே மேளம் கொட்டி பூமேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திடத் தேவையில்லை ஜாலியா
நீ பார்க்கிற பார்வை போதும் நீ பேசுற வார்த்தை போதும்
நான் கேட்கும் நூறு முத்தம் தாறியா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென்று
என் மனசு துடிக்குதடி!
கண்ணு ரண்டும் அலையுதடி கட கட கடவென
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ... ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

அச்சம் மடம் நாணம் விட்டுப் போனதுதான் நாகரிகம்
எட்டுமுழ சேலை இனி வேணுமா? .. ஓ
கத்தரிக்காய் கூட்டு வைக்க புத்தகத்தைப் பாக்குறது
பாசன் ஆகிப் போச்சு இப்ப பாரம்மா!

பேஸ் கட்டுல பெயர் அன்ட் லவ்லி
ஜாக்கட்லை லோக்கல் ரெய்ல்லிங்
குளோசப்லை லோவர் றிப்லை ஏனம்மா?
லாக்கெற்றுல லாரா சாமி நோட்புக்ல சச்சின் ஜாக்சன்
கெயர் கட்டுக்கு பியூட்டி பார்லர் தானம்மா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென
என் மனசு துடிக்குதடி
கண்ணு ரண்டும் அலையுதடி.. கட கட கடவெனக்
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ ...ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா



Kaadhal Kottai - Vellarikka Pinchu Vellarikka

காதல் கோட்டை - மொட்டு மொட்டு மலராத மொட்டு

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஹோய்...

தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன்
மதன் தரும் சுகம் என உன் பார்வையை பார்த்தேன்
உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்
முன்னும் பின்னும் பண்பாட வேண்டும்
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்
என்றும் நீயாய் நான் ஆக வேண்டும்
இலக்கணம் எனதுடலே வா நீ வா
இலக்கியம் உனதுருவே தா நீ தா
தேவா.......

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன்
மலர் உடல் மணம் பெற தினம் தேவனை பார்த்தேன்
பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்
நித்தம் நித்தம் பித்தான சித்தம்
இளமையின் ரகசியமே வா நீ வா
இது தினம் அவசியமே தா நீ தா
தேவா..

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு



Kaadhal Kottai - Mottu Mottu Malaratha Mottu

காதல் கோட்டை - சிவப்பு லோலாக்கு குலுங்குது

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
எந்த ஊரு காத்து வந்து இந்த ஊரில் வீசுதடி
ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்திப் பாக்குதடி
எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு இங்கே இங்கே நான் போட
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி சுத்துறாளே சின்னக்குட்டி
முத்து முத்து பல்லைக் காட்டி முத்தமிடும் வெல்லக் கட்டி
பொட்டழகு நெத்தியிலே இட்டுக்கொள்ள வைக்காதா
கட்டழகு ஊசி ஒன்று குத்திக் குத்தித் தைக்காதா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது



Kaadhal Kottai - Sivappu Lolakku Kulunguthu

காதல் கோட்டை - காலமெலாம் காதல் வாழ்க

காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி

(காலமெலாம்)

கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் பொகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

(காலமெலாம்)

ஜாதி மதம் பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல்
ஆதி அந்தம் ஏதுமில்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே

(காலமெல்லம்)



Kaadhal Kottai - Kalamellam Kadhal

காதல் கோட்டை - நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?

நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்

கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானோ
வார்த்தையில் தெரியாத வடிவமும் நானோ
நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
நிஜமின்றி வேரில்லை என்னிடமே

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
ஓ...நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்



Kaadhal Kottai - Nalam Nalamariya Aval 

கூலிக்காரன் - குத்து விளக்காக குல மகளாக

குத்து விளக்காக குல மகளாக 
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே
என் உள்ளம்தனில் ஓடும் தேனே

குத்து விளக்காக குல மகளாக 
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

பல வண்ணப்பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது அது நீ பூ என்குது
பூவில் ஊறும் வண்டு போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது போதைதான் பண்பாடுது
சோலைக்கொரு வசந்தம்போல் நீ வந்தாய்
காளைக்கென்று சொந்த என்று நீ ஆனாய்
நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற

குத்து விளக்காக குல மகளாக 
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்

ரகசிய கனவு தந்த இந்த இரவு
ஏன் நமை வாட்டுது அது ஏன் சூடேற்றுது
பொட்டுவைத்த நிலவு புத்தம்புது உறவு
இன்று ஏன் தடுமாறுது சுகம்தான் பரிமாறுது
பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம் தான்
பைங்கிளி முத்தம்பெற கூச்சம் தான்
நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள

குத்து விளக்காக குல மகளாக 
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
உனக்கென பிறந்தேனே 
உன் தோளில் என்றும் தவழ்வேனே

குத்து விளக்காக குல மகளாக 
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்



Cooliekkaran - Kuthu Vilakkaga Kula Magalaga

அக்னி நட்சத்திரம் - நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
உன்னோடுநான் ஓயாமல் தேனாற்றிலே நீராடத் நினைக்கையில்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வன்னப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்



Agni Natchathiram - Ninukori Varnam

Followers