Pages

Search This Blog

Friday, April 6, 2018

கூலிக்காரன் - குத்து விளக்காக குல மகளாக

குத்து விளக்காக குல மகளாக 
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே
என் உள்ளம்தனில் ஓடும் தேனே

குத்து விளக்காக குல மகளாக 
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

பல வண்ணப்பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது அது நீ பூ என்குது
பூவில் ஊறும் வண்டு போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது போதைதான் பண்பாடுது
சோலைக்கொரு வசந்தம்போல் நீ வந்தாய்
காளைக்கென்று சொந்த என்று நீ ஆனாய்
நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற

குத்து விளக்காக குல மகளாக 
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்

ரகசிய கனவு தந்த இந்த இரவு
ஏன் நமை வாட்டுது அது ஏன் சூடேற்றுது
பொட்டுவைத்த நிலவு புத்தம்புது உறவு
இன்று ஏன் தடுமாறுது சுகம்தான் பரிமாறுது
பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம் தான்
பைங்கிளி முத்தம்பெற கூச்சம் தான்
நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள

குத்து விளக்காக குல மகளாக 
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
உனக்கென பிறந்தேனே 
உன் தோளில் என்றும் தவழ்வேனே

குத்து விளக்காக குல மகளாக 
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்



Cooliekkaran - Kuthu Vilakkaga Kula Magalaga

Followers