Pages

Search This Blog

Wednesday, January 4, 2017

நாயகன் (1987) - நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்…
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

பூவைச்சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்

தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்

கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு

மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

Nayakan (1987) - Nee Oru Kaadhal

நாயகன் (1987) - நிலா அது வானத்து மேலே பல்லானது

நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்

ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
அஜும் அஜும் அஜும்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
அஜும் அஜும் அஜும்
ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்
அஜும் அஜும் அஜும்
இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்
அஜும் அஜும் அஜும்
பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்திலே
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்
தின்னா பசியது தீர்ந்திடுதா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் ஓய் அது என்னா ஓய்

துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
அஜும் அஜும் அஜும்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
அஜும் அஜும் அஜும்
ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்
அஜும் அஜும் அஜும்
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்
அஜும் அஜும் அஜும்
காட்டுல மேட்டுல உழைச்சவன் நான்
ஆடிட பாடிட வேண்டாமா
வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்
உன் உடையில வமையும் வேண்டாமா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்
நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் அது என்னா ஓய்
ஒய்யா ஓய் அது என்னா ஓய்

Nayakan (1987) - Nila Adhu Vaanathumele

நாயகன் (1987) - அந்தி மழை மேகம் தங்க மழை

அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்
ஹோய் அடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
(தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்)
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்

நீ நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது
மாடங்கள் கலைகூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம்
நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்
தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே
தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
(அந்தி மழை மேகம்)

பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது
கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது
பூவாரம் இனி சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள்
ஊரெல்லாம் களி ஆட்டங்கள் என்னென்ன இனி காட்டுங்கள்
வீடுதோரம் மங்களம் இன்று வந்தது
காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
(அந்தி மழை மேகம்)

Nayakan (1987) - Andhi Mazhai Megam

நாயகன் (1987) - தென்பாண்டி சீமையில தேரோடும்

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

Nayakan (1987) - Thenpaandi Cheemayile

நாயகன் (1987) - நான் சிரித்தால் தீபாவளி ஹோய்

நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை
எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை
வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே
காயம் என்றால் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே
காலம் நேரம் போகும் வா
நான் சிரித்தால் ..
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும் யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்
மீட்டும் கையில் நானோர் வீணை வானில் வைரம் மின்னும் வேலை
காலம் நேரம் போகும் வா
நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

Nayakan (1987) - Naan Sirithal Deepawali

வெள்ளி விழா - காதோடுதான் நான் பாடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடிமீது கண்மூடுவேன்

[காதோடுதான்...]

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான்
நான் அறீந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துனையாக எனை மாற்றவா?
[உனக்கேற்ற...]
குல விளக்காக நான் வாழ வழிகாட்டவா?

[காதோடுதான்...]

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
[பாலூட்ட...]
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
[எனக்காக...]
இதில் யார் கேட்டு என்பாட்டை முடிக்கின்றது

[காதோடுதான்...]

Velli - Vizha

அழகன் - சாதி மல்லி பூச்சரமே

சாதி மல்லி பூச்சரமே , சங்கத்தமிழ் பாச்சரமே ,
ஆசையென்ன ஆசையடி , அவ்வளவு ஆசையடி ,
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ ...

காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் ,
கன்னித் தமிழ் தொண்டாற்று , அதை முன்னேற்று ,
பின்பு கட்டிலில் தாலாட்டு ..

எனது வாழ்வு எனது வீடு என்று வாழ்வது வாழ்க்கையா ?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ?
யாதும் ஊரென யாரு சொன்னது கண்மணி ,
பாடும் நம்தமிழ் பட்டன் சொன்னது பொன்மணி ..
படிக்கத்தான் பாடமா நெனச்சு பாத்தோமா ?
பிடிச்சத நெனச்சு நாம் நடக்க தான் ..
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ..

உலகம் யாவும் உண்ணும்போது 
நாமும் சாப்பிட எண்ணுவோம் ..
உலகம் யாவும் சிரிக்கும்போது 
நாமும் புன்னகை சிந்துவோம் ...
தாயும் வேறல்ல நாடும் வேறல்ல ஒன்று தான் ,
தாயைக்காப்பதும் நாட்டைக்காப்பதும் ஒன்று தான் 
கடுகு போல் உன்மனம் இருக்ககூடாது ,
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும் ...

கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ....



Azhagan - Sathi Malli Poocharame 

Followers