Pages

Search This Blog

Friday, December 30, 2016

தவமாய் தவமிருந்து - உன்னை சரணடைந்தேன்

உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்
என்னில் உரைந்திருந்தேன்
உன்னுள்ளே நான் கரைந்தேன்
கண்கள் இமையை விட்டு உன்னையே நம்பி நிற்க
சுவாசம் காற்றைவிட்டு உன்னையே தேடி செல்ல
தாயாக மாறி போனயே
வேராக தாங்கி நின்றாயே
அயராது ஓடும் நெஞ்சின் இசையாக நீ இருக்க
கண்ணீர் ஊறும் ஆழத்தில காலமெல்லாம் உப்பை போலே
உந்தன் உள்ளே நான் இருப்பேனே

உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்
தினம்தோறும் சாமிகிட்ட
தீராத ஆயுள் கேட்டேன்
நீ பார்க்கும் பார்வை போல
பூவெல்லாம் பூக்க கேட்டேன்
நீ நடக்கும் நிலத்தினிலும் நிம்மதி வளர்த்திடுவேன்
நீ அருந்தும் நீரினிலும் தாய்மையை தந்திடுவேன்
உன் உலகத்தின் மீது நான் மழை ஆகுவேன்
உன் விருப்பங்கள் மீது நான் நதி ஆகுவேன்
உன்னை சரணடைந்தேன்
உன்னுள்ளே நான் பிறந்தேன்
என்னில் உரைந்திருந்தேன்
உன்னுள்ளே நான் கரைந்தேன்
காதல் என்ற சொல்லில் காதலே இல்லை என்பேன்
வாழும் வாழ்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்
சொந்தங்கள் யாவும் ஆனாயே
சோகங்கள் ஆற்றி விட்டாயே
அடைக்காக்கும் தாய்குருவி
சிறகாகி நீ அணைக்க
முட்டை கூட்டின் ஓடு உடைத்து
முட்டிமோதும் குஞ்சை போல
தினமும் புதிதாய் நான்
பிறப்பேனே

Thavamai Thavamirundhu - Unnai saranadaindhen

இயற்கை - காதல் வந்தால் சொல்லி அனுப்பு

Babe, Tell me you love me
I hope I hear it when I'm in love

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி

(காதல் வந்தால்…)

உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு

Babe, Tell me you love me
It's never late, Don't hesitate

சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை தவிர்க்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி…

(காதல் வந்தால்…)

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி…

(காதல் வந்தால்…)

Iyarkai - Kaadhal Vandhaal

அன்பே சிவம் - யார் யார் சிவம்

யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,

ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்,
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்,

அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்…

யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,

யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்,
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்,

அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்…

யார் யார் சிவம்? நீ நான் சிவம்,

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா,

அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்…

Anbe Sivam - Anbe Sivam

அன்பே சிவம் - பூவாசம் புறப்படும் பெண்ணே நான்

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம் 
நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது 
ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு நவின கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா... 

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

Anbe Sivam - Poo Vaasam

அன்பு - அவள் யார் அவள் அழகானவள்

அவள் யார் அவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்

எத்தனை எத்தனை நளினம் அடி என்னுயிர் எங்கும் சலனம்
இருமுறை இருமுறை ஜனனம் அது உன்னை காண்டிட தருனம்
ரத்தம் மொத்தம் உறைகின்றதே…

அவள் யார் அவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்

அன்பே நீ என் நெஞ்சை போர் கப்பல் போல் வந்து
சொல்லாமல் கொள்ளாமல் தாக்காதே தாக்காதே
ஆணோடு எப்போதும் இம்சைகள் செய்கின்ற
ஆதிக்க பெண்ணாக மாறாதே
அந்தி நிலா ஆ அந்தி நிலா
அல்லி மலர் அள்ளி அள்ளி எய்தவளா
என்னவளா என்னவளா
என்னை ஒரு அர்த்தமென செய்தவளா
செவ்வரி ஊறிய விழிகள்
அதில் செந்தமிழ் மிஞ்சிடும் மொழிகள்
புன்னகை செய்யும் புயல் மேகமே…

அவள் யார் அவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்

ஐந்தாறு கண்டங்கள் நீ தாண்டி சென்றாலும்
அங்கேயும் உனை வந்து பெண் பார்ப்பேன்
செவ்வாயில் நீ சென்று வாழ்ந்தாலும்
நான் உந்தன் செவ்வாயில் ஓரத்தில் தேன் வார்ப்பேன்
என்னுயிரே… என்னுயிரே…
மெய்யாக நான் இங்கு பொய்யானேன்
என்னுயிரே… என்னுயிரே…
பொய்யல்ல நான் இங்கு நீயானேன்
சட்டென சட்டென இதயம்
பல சில்லென சில்லென உடையும்
அத்தனை சில்லிலும் உன் பிம்பமே…

அவள் யார் அவள் அழகானவள் அடி நெஞ்சிலே மின்னல்
ஒரு பார்வையால் ஒரு பார்வையால்
முதல் காதலின் துள்ளல்

எத்தனை எத்தனை நளினம் அடி என்னுயிர் எங்கும் சலனம்
இருமுறை இருமுறை ஜனனம் அது உன்னை காண்டிட தருனம்
ரத்தம் மொத்தம் உறைகின்றதே…

Anbu - Aval Yaar Aval

அன்பு - தவமின்றி கிடைத்த வரமே

தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியில் தானே வாழ்கிறேன் 
நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிரேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்
தவமின்றி கிடைத்த வரமே ஒ ...இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஒ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற
வேண்டாமா ? வேண்டாமா ?
கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா ? வேண்டாமா ?
கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை சேரட்டும் 
முத்தத்தின் எண்ணிக்கை
முடிவின்றி போகட்டும்

பகலெல்லாம் இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன
நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

சூடான இடம் வேண்டும்
சுகமாகவும் வேண்டும்
தருவாயா ? தருவாயா ?

கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா ? வருவாயா ?

விழுந்தாழும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் 
உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்
இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே நான் வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முக்தில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே

இனி வாழ்வில் எல்லாம் சுகமே

Anbu - Thavamindri Kidaitha

சந்திரமுகி - அண்ணனோட பாட்டு அ அ

வாழ்த்துறேன் வாழ்த்துறேன் வாரும் பெண்களுக்கு வாழ்த்துறேன்
பொண்ண பெத்த தாயாரே போதரமா கேட்டுறுங்க
மாப்பிள்ளைய பெத்தவக மனம் மங்கலமா கேட்டுறுங்க
சுண்ணாம்பு போல சுவிச்ச முகத்துக்கு 
எங்க சூரியனர் வம்சம் எங்கெங்கே வச்சுச்சோ
வெத்தல போல சிரிச்ச முகத்துக்கே
எங்க சந்திரனார் வம்சம் எங்கெங்கோ வாச்சுச்சோ

அரே அரே அரே அரே அரே

ஓ ஓ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
போடு சக்கை போடு போடு போட்டா அளந்து போடுடா
நேத்து காற்றில் ஓடிப் போச்சு இன்றே வாழ்ந்து பாருடா

அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு

ஓ ஓ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
அ அ
அ அ
அ அ
அ அ

அன்பின் உறவாயிரு உண்மை மறவாதிரு
நூறு ஆண்டு வரை வாழ்வில் வளமாய் இரு
வலை பூப்போல வெட்கம் பாரு
மனசுக்குள்ளே தான் மத்தாப்பு
இரவில் இனிமைதான் தூக்கம் ஏது
மார்பில் தங்காது மாராப்பு
நீ அறியா விஷயம் ஓ
அது நாளை புரியும் ஓ
அவன் மூச்சுக்காற்றில் உன் சேலை எறியும்
ஓ கொக்கரக்கோ சேவல் ஒன்னு
கோழி கிட்ட மாட்டிக்கிட்டு

அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு

ஓ ஓ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
இப்புடுச்சூடு...

உள்ளம் தெளிவாக வை எண்ணம் உயர்வாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை
வேர்கள் இல்லாத மரமும் உண்டா சொந்தக்காலில் நீ நில்லேன்மா
நீ நின்னா பின்னாலே ஊரே கேட்கும் அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா
கண் இமைக்கும் நொடியில் அட எதுவும் நடக்கும்
இது எனக்கு தெரியும் நாளை உனக்கும் புரியும்
ஹேய் அஞ்சுக்குள்ள நாலை வெய் 
ஆளம் பார்த்து காலை வெய்

அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு

ஓ ஓ அண்ணனோட பாட்டு அ அ ஆட்டம் போடுடா
அ அ அக்கறையா கேட்டா அ அ அர்த்தம் நூறுடா
போடு சக்கை போடு போடு போட்டா அளந்து போடுடா
நேத்து காற்றில் ஓடிப் போச்சு இன்றே வாழ்ந்து பாருடா

அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு
அகர்ந்தவில்லா நகர்த்து பேசு

Chandramukhi - Annanoda Pattu

Followers