Pages

Search This Blog

Thursday, November 24, 2016

கரகாட்டக்காரன் - பாட்டாலே புத்தி சொன்னார்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்

காளயர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும்
கட்டில் பாடலின்
மெட்டு போடசொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட
திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்
நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவை
கெட்டவையா என அரியேன் உண்மையிலே
எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

Karakattakaran - Paattaalae puththi

கரகாட்டக்காரன் - ஊரு விட்டு ஊரு வந்து

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கேட்டு போனதின்னா
நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கேட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேணாம்
பொன்னாலே கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணா
ஊருல ஒலகத்தில
எங்க கதை போல் ஏதும்
நடக்கலியா
வீட்டையும் மறந்துபுட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா

மன்மத லீலையை வென்றவர் உண்டோ
இல்ல இல்ல

மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
இல்ல இல்ல

மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ

காதல் ஈடேற
பாடு என் கூட

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கெட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ

ஆனா பொறந்த எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்
வீனா திரிஞ்ச ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்

வாழ்கைய ரசிக்கணும்னா
வஞ்சிக் கோடி
வாசனை பட வேணும்
வாலிபம் இனிகனும்ன

பொண்ண கொஞ்சம்
ஆசையில் தொட வேணும்

கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
ஆமா ஆமா மா

கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
ஆமா ஆமா மா

கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம பூமி இங்கேது

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கெட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி
அய்யயோ
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேறு கெட்டு போனதின்ன
நம்ம பொழப்பு என்னாகுங்க

Karakattakaran - Ooruvittu Ooruvanthu

கரகாட்டக்காரன் - மாங்குயிலே பூங்குயிலே சேதி

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத
தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து
முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய்

Karakattakaran - Maanguyilae

கரகாட்டக்காரன் - இந்த மான் உந்தன் சொந்த மான்

இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே...

பெண் இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்

***
வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவனே
ஆண் என்னுயிரே...

***
பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

இந்த மான்
எந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
என்னவனே..

Karakattakaran - Intha Maan

கரகாட்டக்காரன் - முந்தி முந்தி விநாயகரே

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே!

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே!

முப்பத்து முக்கோடித் தேவர்களே!
முப்பத்து முக்கோடித் தேவர்களே!

எப்போதும் உம் துணை வேண்டுமைய்யா!

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே!

முப்பத்து முக்கோடித் தேவர்களே!
எப்போதும் உம் துணை வேண்டுமைய்யா!

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே

Karakattakaran - Mundhi Mundhi

பக்தி பாடல் - குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)

அனுபல்லவி [சிவ ரஞ்சினி ]

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1[சிவ ரஞ்சினி ]

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 2 [காபி ]

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)


சரணம் 3 [காபி ]

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

சரணம் 4 [சிந்து பைரவி ]

கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)

சரணம் 5 [ சிந்து பைரவி ]

குறை ஒன்றும் இல்லை

யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா

கோவிந்தா கோவிந்தா (3)

Bakthi Paadal - Kurai Ondrum Illai Kanna

மாலையிட்ட மங்கை - செந்தமிழ்த் தேன்மொழியாள்

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே...
நின்றது போல் நின்றாள் நெடுதூரம் பறந்தாள்
நிற்குமோ நிலைக்குமோ நெஞ்சம் 
மணம் பெறுமோ வாழ்வே...

செந்தமிழ்த் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
[நிலாவென...]
பைங்கனி இதழ்களில் பழரசம் தருவாள் 
பருகிட தலைகுனிவாள்

காற்றினில் பிறந்தவளோ 
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
[காற்றினில்...]
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ?
[அவள் செந்தமிழ்த்...]

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கே பெண்ணே 
பேராசை கொள்ளும் 
பேரழகெல்லாம் படைத்தவளோ..
[செந்தமிழ்த்...]

Maalaiyitta Mangai - Sendhamizh Thenmozhiyaal

Followers