Pages

Search This Blog

Monday, November 21, 2016

பூமகள் ஊர்வலம் - மலரே ஒரு வார்த்தை பேசு

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று என்பது காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா வா

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே 
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை
வெட்கம் பாடாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும்
சாயம் போகாதடி
(மலரே..)

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள் 
தீண்ட மட்டும்
அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதைகள் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அழியாது
இதயம் எப்போதும் மலரும் என்று 
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
நீ எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கன்னி
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்
(மலரே..)

Poomagal Oorvalam - Malare Oru Varthai

சிநேகிதியே - ராதை மனதில் ராதை மனதில்

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க
(ராதை மனதில்..)

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
(ராதை மனதில்...)

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்
கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..
(ராதை மனதில்..)

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை வெறும் காற்றூ என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

Snegithiye - Radhai Manathil

சிநேகிதியே - தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ
தேணிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ

நட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்து
நிலவுன்னை கோலம் போட அழைத்திடும்
நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்
என்னோடு நீயும் ஓட முகில்கள் ஊஞ்சல் போடும்
உலவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைதே போகும்
பகலினில் முழுவதும் வெயிலினிலே
உனை சுட்டு வருத்திய வானம் அது
இரவினில் முழுவதும் அதை எண்ணியே
பனித்துளி சிந்திய அழுகிறது
(தேவதை வம்சம்..)

வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே
சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும்
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே
உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள்
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் உயிருக்கு ஆனந்தங்கள்
பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும்
நீயும் தொட சருகுக்கு உயிர் பிறக்கும்
வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்
(தேவதை வம்சம்..)

Snegithiye - Devadhai Vamsam

பொங்கி வரும் காவேரி - வெள்ளி கொலுசு மணி

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி 
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி 
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன 
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன 
பாடாத ராகம் சொல்லி  பாட்டு படிச்சதென்ன 
கூடாம கூட வச்சு சேத்ததென்ன 

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி 
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி 
சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன 

துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான் 
மெல்ல மெல்ல வந்து அணைக்கும் 
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச 
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும் 
பொன்னி நதிப்போல நானும் உன்ன 
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா 
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண 
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா 
காத்து காத்து நானும் பூத்துப் பூத்துப் போனேன் 
சேந்து பாடும்போது தேரில் ஏறலானேன் 
உன் பேரச்சொல்லி பாடி வச்சா ஊறுதம்மா  தேனே 

வெள்ளி கொலுசு மணி .......

கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த 
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான் 
எண்ணம் முழுதும் பொங்கி வழியும் 
வாங்கினது நல்ல வரம்தான் 
கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன் 
நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன் 
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன் 
சாவியத்தான் தொலச்சுபுட்டேன் 
உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு 
மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு 
காலமெல்லாம் கேட்டிடத்தான் காத்திருக்கேன் பாத்து 

வெள்ளி கொலுசு மணி ......

Pongi Varum Kaveri - velli kolusu mani

அஞ்சலி - அஞ்சலி அஞ்சலி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்க கனி
பொன்னின் மனி சின்ன சின்ன
கண்ணின் மனி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி
முத்தங்கள் தந்திடும் இந்த பூ மேனி
கன்படும் கன்படும் இந்த பொன் மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
ஆஹாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே உன்னை தந்தான் அம்ம

கன்னே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தலட்டும்
நடக்கும் நடயும் ஒரு பல்லக்கு சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பு
உனது அழகுகென்ன ராஜாத்தி 
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை 
உலாவும் இந்த வெள்ளி தாரகை

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி ஞலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்க கனி
பொன்னின் மனி சின்ன சின்ன
கன்னின் மனி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண் மேனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மேனி
முத்தங்கள் தந்திடும் இந்த பூ மேனி
கன்படும் கன்படும் இந்த பொன் மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

Anjali - Anjali

அன்னை இல்லம் - மடி மீது தலை வைத்து

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்... ஓ... ஓ...
மறு நாள் எழுந்து பார்ப்போம்... ஓ... ஓ...

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கல குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே

ஆஹா

ஓஹோ

ம் ஹும்...

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம் 

இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே
சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே

சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம் 

வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே 
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே 

காயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
ஆஹா
ஹோ

ம் ஹும்...

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

இருவர் மறு நாள் எழுந்து பார்ப்போம்

Annai Illam - Madi Meethu

அன்னை இல்லம் - நடையா இது நடையா

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
கடற்கரை காத்து அடிக்குது
காத்துல சேலை நடிக்குது
முன்னாலே வரச் சொல்லி அழைக்குது
முகத்திலே கடுகு வெடிக்குது

வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
கண்ணுனு இருந்தா இமை வேணும்
கழுத்துனு இருந்தா நகை வேணும்
பொண்ணுன்னு இருந்தா துணை வேணும்
ஒண்ணும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா
கல்யாணம் பண்ணிக் கொள்ள தோதா

நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது

வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழி போனா
தையா தக்கா தையா தக்கா உய்யா

Annai Illam -  Nadaiya Idhu Nadaiya

Followers