Pages

Search This Blog

Wednesday, December 5, 2018

அழகன் - மழையும் நீயே வெயிலும் நீயே

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா…உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா…உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அது தானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அது தானா மோன நிலை
இதுதான்…சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா…உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

கலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலைபோல் இதயம் அலையும்
கருநீலக்கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யார் அறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யார் அறிவார்
முதலாய்…முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா…உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா



Azhagan - Mazhaiyum Neeye 

Followers