Pages

Search This Blog

Friday, December 21, 2018

மங்கை மான்விழி அம்புகள் - உயிரே என் உயிரே நினைவில் அவள் முகம் காட்டாதிரு

உயிரே என் உயிரே
நினைவில் அவள் முகம் காட்டாதிரு
இரவே என் இரவே
நிலவின்றி உன் நேரம் கடந்திடு
இமை மூடினாள் அவள் ஞாபகம்
விழி திறந்தாள் இவள் ஓவியம்
இது என்ன டா புது போதையா
ஒரு பாவையால் உயிர் போகுதே

என்னை நான் தெரியாமல்
உனக்குள்ளே தொலைத்தேனே
உண்னாமல் உறங்காமல் தவித்தேனே நான்
தினம் தோரும் உன்கூட
நெடுந்தூரம் நன் போக
விரலோடு விரல் சேர்த்து காப்பேனடி

ஒரு நாள் தானே உன்னை பார்த்தேன்
மறுநாள் நீயும் கனவில் வந்தாய்
தினமும் உன்னை கண்ணில் காண
கனவானாலும் கண்விழித்திருதேன்
உன் கருவிழி பார்வை என்னை கவர கவர
என் இரு விழி பார்வை இங்கு சிதற சிதற

மஞ்சள் மயிலே என்னை
கொஞ்சும் குயிலே
நீ இங்கு தேடி வந்த குறிஞ்சி பூவடி

பேசிய வார்த்தை பேரிசையாக
பேசா மௌனம் மெல்லிசையாக
இயலும் இசையும் நாடகமாக
இரவும் பகலும் நொடியில் போக
ஐயோ என்னை இந்த காதல்
படுத்தும் பாடு போதுமடா

உன் பெயரைத்தான் மொழியாக்கினேன்
உன் வாசம்தான் என் ஸ்வஸமே
உன்னோடு தன் நான் போகவே
கடிகாரமாய் உன்னை சுற்றினேன்
ஒரு பார்வை பாரேன்
ஒரு வார்த்தை கூரேன் 
அது போதும் பெண்னே
உயிரும் தாரேன்

எழுத்தில்லா கவியே
முல் இல்லா மலரே
பதில் சொல்லி போயேன் என் குறிஞ்சி பூவே
என் நாட்கள் எல்லாமே
உன் நிழலாய் வாழுவேனே
என் காதல் முழுவதும் உனக்காகத்தான்
கம்பனின் கவிகள் தோற்றிடும் வகையில்
காதலை வார்த்தையால் கோர்ப்பேனே நான்

உயிரே என் உயிரே
நினைவில் அவள் முகம் காட்டாதிரு
இரவே என் இரவே
நிலவின்றி உன் நேரம் கடந்திடு
இமை மூடினாள் அவள் ஞாபகம்
விழி திறந்தாள் இவள் ஓவியம்
இது என்ன டா புது போதையா
ஒரு பாவையால் உயிர் போகுதே



Mangai Maanvizhi Ambugal - Uyire En Uyire Ninaivil Aval 

Followers