Pages

Search This Blog

Monday, August 13, 2018

அரச கட்டளை - என்னைப் பாட வைத்தவன் ஒருவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன்கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன்கோவில் இல்லாத இறைவன்

அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன்கோவில் இல்லாத இறைவன்

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன்கோவில் இல்லாத இறைவன்

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன்கோவில் இல்லாத இறைவன்



Arasa Kattalai - Ennai Paada vaithavan

Followers