Pages

Search This Blog

Monday, January 6, 2014

காதல் ஓவியம் - நாதம் என் ஜீவனே

தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி?
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சொந்தம் தந்த சொந்தம்..

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே..

Kadhal Oviyam - Naatham En Jeevanae

Followers