Pages

Search This Blog

Tuesday, October 1, 2013

மத கஜ ராஜா - சற்று முன்வரை

சற்று முன்வரை என்னில் இருந்தேன்
உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன்
ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன் ஓ... ஓ...

உன்னை பார்த்ததும் தூக்கம் மறந்தேன்
காதல் வந்ததும் காற்றில் மிதந்தேன்
நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் ஓ... ஓ...

உன் விழி சாரல் மழையிலே ஜலதோஷம் பிடிக்குதே
நீ இருந்தால் என்னருகிலே எனக்கேதோ நடக்குதே
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
(சற்று முன்வரை)

யாரோ போலே ஆனேன் நானே என் மேல் காதல் கவிழ
வானம் போகும் தூரம் போலே உன்மேல் ஆசை விரிய
இரவில் என் நினைவில் என் உறக்கம் கெட்டு தொலைய
கனவில் என் அருகில் ஐயோ வந்து கொல்லாதே
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
(சற்று முன்வரை)

நீ என்னை பார்த்தால் போதும் போதும்
என் மேல் பூக்கள் சிதரும் ஹோ...
நீ ஒர் வார்த்தை சொன்னால் போதும்
தீயை தீண்டும் விரலும் ஹோ...

உன்னால் தாகம் வெல்லம் போல என் மேல் பொங்கி வலிய
நீயும் ஹய்யோ பார்த்தாய் பார்வை என்னுல் தீயாய் எரிய
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
(சற்று முன்வரை)

உன் விழி சாரல் மழையிலே ஜலதோஷம் பிடிக்குதே
நீ இருந்தால் என்னருகிலே எனக்கேதோ நடக்குதே
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
 
Madha Gaja Raja - Sattru Mun Varai

Followers