Pages

Search This Blog

Friday, October 25, 2013

கண்ணோடு காண்பதெல்லாம் - தாஜ்மஹால் ஒன்று

தாஜ்மஹால்  ஒன்று வந்து காதல்  சொல்லியது 
தரா ...தரா ரா ... 
தங்கநிலா  ஒன்று என் மனதை கிள்ளியதே
தரா...தரா ரா... 
தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே 
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
அந்த ஓசோன்  தாண்டி  வந்து, உயிர் ஒரு துளி  பேசியதே 
இனியெல்லாம்  காதல் மாயம் , எனை  கொன்றாய்  இந்த யுகம் 
சித்திரை  மாதம்  மார்கழி  ஆனது
வா  நீ வா என் அதிசய  பூவே  வா
நீ வா நீ வா என் அழகிய தீவே  வா 

வீசி வரும் தென்றலை  கிழித்து   ஆடைகள்  நெய்து  தருவேனே .. 
பூத்து  நிற்கும்  பூக்களை  செதுக்கி   காலடி  செய்து தருவேனே.. 
வானவில்லின்  ஒரு நிறம் பிரித்து   உதட்டுக்கு  சாயம்  தருவேனே.. 
மின்னல் தரும் ஒலியினை  உருக்கி   வளையலும்  செய்து தருவேனே.. 
என் இதயம் சிறகாச்சு , என் இளமை  நிஜமாச்சு 
என் இதயம் சிறகாச்சு, என் இளமை நிஜமாச்சு
நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா 

(தாஜ்மஹால்...)  

காற்றை  பிடித்து  வானத்தில்  ஏறி   நிலவை  திறந்தேன்  நீ தெரிந்தாய் .. 
மேகம்  உடைத்து  மெதுவாய்  பார்த்தேன்   துளியாய்  அதிலே  நீ தெரிந்தாய்..  புல்லை  எரித்து    சாம்பல்  விதைத்தேன்   பூவாய்  அதிலே நீ முளைத்தாய் ..  கடலை பிடித்து அலைகள் வடித்தேன்   நுரைகள்  முழுதும் நீ தெரிந்தாய் 
நீ கேட்டால்  போதுமடி , என் உயிரை பரிசளிபேன் 
நீ கேட்டால் போதுமடி, என்  உயிரை பரிசளிபேன்
நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா 

Kannodu Kaanbathellam - TajMahal ondru

Followers