Pages

Search This Blog

Monday, October 15, 2018

அமர்க்களம் - காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்

பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூமி எப்படி உய்யும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி

கண்ணகிக்குக் கோயில் கட்டும் கற்பு மிக்க நாடிது
கற்புன்னா எத்தன லிட்டர் புதுப்பொண்ணு கேட்குது (இசை)
அட சேல பாவாட அது மலையேறிப்போச்சு
மிடியோடு சுரிதாரும் பொது உடையாகிப்போச்சு
போழி புண்ணாக்கு பள்ளி எதுக்கு 
தந்தாலே பட்டம் இருக்கு
ஏட்டில் உள்ளது ஒழுக்கம் அந்து ரோட்டில் வந்ததும் வழுக்கும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி 
அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே மரத் தமிழனுக்கு ஜே
நம்ம தலைவனுக்கு ஜே ஜே 
தலைவனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே

திரையில பொய்கள சொன்னா சாதிசனம் நம்புது
கருத்துள்ள கவிஞ்சன் சொன்னா காத தூரம் ஓடுது (இசை)
அட சத்துள்ள தானியம் அது காணாமப் போச்சு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
பாசம் கண்ணீரு பழைய தொல்ல தாயே செத்தாலும் அழுவதில்ல
அட ஏழுகுண்டலவாட இது இன்னைக்குத் திருந்தும் நாடா
அட பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி 

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா (இசை)
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா (இசை)
ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும் நீங்க
தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்

பொய்யும் சத்தியம் செய்யும் இந்த பூமி எப்படி உய்யும்
இதப் பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட பக்தி கொறையுது
வினை தீர்க்க வந்த சாமி கூட ஆத்தில் கரையுது

மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி மஹாகணபதி



Amarkalam - Kaalam Kalikalam

அமர்க்களம் - சொந்த குரலில் பாட

சொந்த குரலில் பாட 
ரொம்ப நாளா ஆசை
ஹெல்லோ சுசிலா ஆண்டி 
ஹெல்லோ ஜானகி ஆண்டி
குயில் பாட்டு சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்
(சொந்த..)

காற்றிலேறி பாட்டுப் பாட போகிறேன்
ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்
வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்
நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்
முன்னூரு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்
(சொந்த..)

இந்த பூமி பழைய பூமி அல்லவா
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டு வா
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா
(சொந்த..)



Amarkalam - Sontha Kuralil Paada

Saturday, October 13, 2018

இமைக்கா நொடிகள் - காதல் ஒரு ஆகாயம் அது என்றும்

காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன் காதல்
என்றும் பிரியாதே

காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு சந்தேகம்
தாங்கிட முடியாது

மேடும் பள்ளம்
இல்லாமல் ஒரு பாதை
இங்கு கிடையாது பிரிவும்
துயரம் இல்லாமல் ஒரு
காதலின் ஆழம் புரியாதே

காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி

கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன்
காதல் என்றும் பிரியாதே

காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்

இல்லையடி இல்லையடி
இல்லையடி இல்லையடி
இல்லையடி இல்லையடி



Imaikkaa Nodigal - Kadhal Oru Aagayam

இமைக்கா நொடிகள் - நீயும் நானும் அன்பே

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

தாய் மொழி போலே நீ வாழ்வை என்னில்
உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே என்னை உன்னில்

தாமதமாய் உன்னை கண்ட பின்னும்
தாய் மடியை வந்தாய் நான் தூங்கவே

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

உன் தேவையை நான் தீர்க்கவேய
வெண்ணீரில் மீனை நீந்துவேன்
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்

உன் பாதியும் என் மீதியும்
ஒன்றே தான் என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்

சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை பெண்ணே
நாளும் வாழலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி


என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்



Imaikkaa Nodigal - Neeyum Naanum Anbe

Friday, October 5, 2018

கீதா கோவிந்தம் - இன்கெம் இன்கெம் காவாலே

கீதா கோவிந்தம் - இங்கேம்  இங்கேம் காவாலே

Geetha Govindam - Inkem Inkem Inkem




Friday, September 21, 2018

பெரியண்ணா - ஏய் தன்னானே தாமரைப்பூ

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க...
ஊரெல்லாம் கூட்டிகிட்டு...
வந்திடுங்க மேளம் கொட்டி...

ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்...

ஆண்: கொட்டுற பனியில நானும் உனக்கு
கொடையா மாறட்டுமா?
உன் வெட்டுற விழியில, மூட்டுற நெருப்புல 
குளிரும் காயட்டுமா?

பெண்: உனக்கும் எனக்கும் மனசு இப்ப
வக்கத் த்ரி ஆச்சி...
ஒளிவா, மறவா, பேசி சிரிக்க
ஓட கடயாட்சி...

ஆண்: கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு...
பெண்: ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு...

ஆண்: உன் இடுப்பு சேல நழுவ
அத எடுத்து எடுத்து சொருவ...

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஆண்: ஏய் தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வான்கிவாறேன்...

பெண்: தெனமும் என்ன தொரத்துதைய்யா
உங்க பெருமூச்சி...
ஆத்தி பூத்த மாலை போல
மாமா உன் பேச்சு...

ஆண்: கண்ணே உனக்கு, மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா?
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா?

பெண்: மாமன் தரனும் சீரு,
ரெண்டு மாங்கா தட்டு சோறு...

ஆண்: நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கூறு...

பெண்: வெடல புள்ள நானும் 
ஒரு வெவரம் கேட்க வேணும்...

பெண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க...
ஊரெல்லாம் கூட்டிகிட்டு...
வந்திடுங்க மேளம் கொட்டி...

ஆண்: ஏய் தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில...
ஏய் தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்...



Periyanna - Thanthane Thamara Poo

பெரியண்ணா - நிலவே நிலவே சரிகம பதநி பாடு

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு (

உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன் 
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு
நீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும் 
என்னடி விளையாட்டு 

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு 

காதல் பேசும் வயதுக்கு வந்த நிலா 
உன்னை நெஞ்சைத் தீண்ட அனுமதி தந்த நிலா
தன் மனதைச் சொல்லிவிட தயங்குது தங்க நிலா

அட ஆதாம் ஏவாள் பார்த்தது பழைய நிலா
என் ஆசை நெஞ்சை ஈரத்தது புதிய நிலா
தன் கனவுகளை மெல்ல முனகும் நிலா
என் ஆயுளையே அள்ளிப் பருகும் நிலா 

பகலுடன் இரவும் பதினெட்டு வருடம் 
வளர்ந்தது இந்த நிலா இது உனக்கே சொந்த நிலா

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு

கண்ணில் கண்ணில் கனவுகள் பூசுகிறாய்
என் காதல் நெஞ்சில் நினைவுகள் வீசுகிறாய் 
தொட தொட நான் வருகையிலே 
தொலைவினில் ஓடுகிறாய்
அட நானும் உன்னை பார்ப்பது தெரியாதா
நான் பேசும் வார்த்தை உனக்கது புரியாதா

அடி நான் இருந்தேன் உன் ஞாபகமாய் 
அது சொல்லுகிறேன் நான் சூசகமாய் 
அருகில் நானும் தொலைவில் நீயும் 
இருந்தால் காதல் எது
மனம் கேட்கும் கேள்வி இது 

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு

நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு



Periyanna - Nilave nilave

Followers