Pages

Search This Blog

Tuesday, July 3, 2018

சின்னவர் - அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்

ஆ: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

பெ: சந்திரரே வாரும் சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்

ஆ: கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்

(அந்தியில )

பெ: கட்டுமரம் தோணி போல கட்டழகு உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்தத் தேவை இல்ல முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ

ஆ: பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாரும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்ம்ல நீ போடு தூங்காத விருந்து

பெ: நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

(அந்தியில )

ஆ: வெள்ளியல தாளந்தட்ட சொல்லி ஒரு மேளங்கோட்ட
வேல வந்தாச்சு கண்ணம்மா
மல்லிகப்பூ மாலை கட்ட மாரியிட வேல கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா

பெ: கடலோரம் காத்து ஒரு கவிபாடும் பாட்டு
தாளாம நூலானேன் ஆளான நாந்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்

ஆ: தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

(அந்தியில )..



Chinnavar - Andhiyile Vaanam Thanthanathom Podum

தேவதை - ஒரு நாள் அந்த ஒரு நாள்

ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா

கனவா வெறும் கதையா
இளநெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா 

உன் நினைவு தழுவி இருந்தேன்
அந்த உறக்கம் தழுவ மறந்தேன் 
நீ அறிவாயோ
உனைப் பார்க்க அன்று பிறந்தேன்
அதனால் இறக்க மறந்துபோனேன் 
நீ அறிவாயோ
காலம் காலம் கடத்தலாம் காதல் சாகாது
வாழ்வின் எல்லை மீறலாம் எதுதான் ஆகாது

மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும்
மறுக்கவேண்டாம் என் அன்பே
மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என் அன்பே
தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் சபதம் காப்பேன்
கைகள் உறவில் கலந்தாட வேண்டும் கரும்பின் உற்றே
ஏழு புவனம் வென்று வந்தேன் 
நான் உன் முன்னே தோல்விதான் கண்டேன்

அருகினில் அன்று உனைக் கண்ட போது
தூர தூரம் நின்றேன்
நீண்ட தூரம் நீ சென்ற போதும்
உந்தன் அருகே இருந்தேன்
காதல் உலகில் மேற்கோடு வெளிச்சம் போவதில்லை
காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிப்பதில்லை
கனவு தேடும் கனவு வேண்டாம் 
நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்



Devathai - Orunal Antha Oru Naal

வள்ளி - என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கண் இரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ…ஓர்…மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்



Valli - Ennulle Ennulle Pala Minnal

மனுநீதி - மயிலாடும் பாறை

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

துள்ளி ஓடும் முயலுக்குதான்
காதில் பொட்டு வைப்போமா தான்
கம்மல் போட்டு பார்ப்போமா

தத்தி நடக்கும் குட்ட வாத்தே
நடந்திட பழகுனுமா தான்
நடைவண்டி தரவா

ஒத்த காலிலே 
ஹா..ஆ.. ஹா...ஆ.. ஹா...ஆ..
ஒத்த காலிலே
நிக்கும் நாரையே
கேக்கும் வரத்தையே நாமும் தருவோமா
மாட்டு தானி சிக்கெடுத்து
ரெட்டை ஜடை பின்னுவோமா
வாயில்லாத ஜீவன் எல்லாம்
கொஞ்ச காலம் குழந்தை ஆகும்மம்மா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

மூக்கு சிவந்த பச்சகிளியே
உனக்கென்ன கோவமா தான்
கொவபழம் தரவா

வாடி கிடக்கும் பச்சகொடியே
உனக்கென்ன தாவாமா தான்
தண்ணி ஏதும் தரவா

கோவில் மடப்புரா 
ஹா..ஆ.. ஹா..ஆ.. ஹா..ஆ..
கோவில் மடப்புரா
கூடி ஆடுமே
மேக கோட்டமே
மேடை போடுமே
வண்ண வண்ண பட்டமிட்டு
வெண்ணிலவ தொடுவோமா
சின்ன சின்ன செம்பு வச்சி
வக்கானையா சமையல் செய்வோமா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா

மயிலாடும் பாறை பக்கத்துல ஓடை
அழகு ஓவியம்மா
பட்டிக்காடு சிரிக்கும் பாருங்கம்மா
உழுத வயலுள்ள
குட்டி குட்டி கவிதை விளையும்மா



Manu Needhi - Mayilaadum Paarai Pakkathula Odai

பாண்டி நாட்டுத் தங்கம் - உன் மனசுல பாட்டு தான் இருக்குது

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசைய்யா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே என்னக்கோர் இடம் நீ ஒதுக்கு

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சேன்
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதி தான்
போட ஒரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிசேன் நித்தம் நித்தம் நானனும் தான் பூத்து

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியே தந்ததய்யா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோனல
பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதைய்யா
போன வழி பாத்து கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்த ஊருகெல்லாம் ராணி நான்..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான்..
உங்கல தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்ன போதும்

என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
நான் உன்ன மட்டும் பாடும் குயிலு தான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான்
மனசு முழுதும் இசை தான் எனக்கு
இசையோடு உனக்கும் இடமும் இருக்கு

என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது



Paandi Nattu Thangam - Unn Manasula Paattuthaan

உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் - என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

பெண்:
ஆ... ஆ.. ஆ.. ஆ..

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி 
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி
நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி

சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு
என்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு
அன்பே ஓடி வா.... அன்பால் கூடவா...
அன்பே ஓடி வா அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி...
நிதமும் என்னைத் தொட்டு..

ஆண்:

என்னைத் தொட்டு...நெஞ்சைத் தொட்டு

என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி

ஆ... ஆ.. ஆ...
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி... உன்னில் நானடி...
என்னில் நீயடி.. உன்னில் நானடி..
ஓ…. பைங்கிளி…..நிதமும்

என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத்தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச்சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா... அன்பால் கூடவா... ஓ.. பைங்கிளி…. 

நிதமும் என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி.....



Unna Nenachen Pattu Padichen - Ennai Thottu Alli Konda

அதிசயப்பிறவி - உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து

பெண் : தந்தனா..னா...

ஆண் : ஏய்..என்னாச்சு உனக்கு

பெண் : ஹ..ஹா..

ஆண் : இங்க பார்ரா....ஹஹ்ஹ

பெண் : ஹ.ஹ.ஹா..ம்..ஹு..ம்...ஹும் ஹ ஹா..ஹஹா... (இசை)

பெண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

ஆண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

பெண் : உன்னப் பார்த்த நேரம்

ஆண் : ஹஹா..

பெண் : ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ணு பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

ஆண் : ஒத்த விழியால பேசுற
ஒண்ணுரெண்டு பானம் வீசுற
சொப்பனத்தில் மூச்சு வாங்குற
சொல்லமுடியாம ஏங்குற

பெண் : ஏனய்யா அந்த மாதிரி ஏங்கணும் நடுராத்திரி
தேனைய்யா இந்த மாம்பலம் தேவையா எடு சீக்கிரம்
அச்சமும் விட்டு தான் வந்துட்ட சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட
அதை விட்டு தள்ளு என்னை கட்டிக்கொள்ளு

ஆண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும் ஹேய்
உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்
ஏ..சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

பெண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

பெண் : தென்னமரக்கீத்து ஆடுது தெக்கு தெசை காத்து பாடுது
என்னை மெதுவாக தீண்டுது உன்னை என சேர தூண்டுது
ஆசைய அடை காக்குற, யாரையோ எதிர் பாக்குற
காதலை அள்ளி வீசுற, காளைய கட்டப் பாக்குற

பெண் : என்னைய்யா செய்யட்டும் பொண்ணு நான்

ஆண் : ஹ..ஹ

பெண் : தூக்கத்தை விட்டது கண்ணு தான்

ஆண் : ஒரு வேகமாச்சா ரொம்ப தாகமாச்சா

பெண் : உன்னப் பார்த்த நேரம்

ஆண் : ஹேய்

பெண் : ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்

பெண் : உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல

ஆண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்



Athisaya Piravi - Unna Partha Neram

Followers