Pages

Search This Blog

Wednesday, November 23, 2016

காக்க காக்க - தூது வருமா தூது வருமா

தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
(தூது வருமா..)

நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே 
சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் 
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே என்னைத் தூக்கி சில்லவா
(தூது வருமா..)

கறுப்பிலே உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்துக்கிடந்தேன் யட்சன் போலே
நீயும் வந்தாய் சரசங்கள் செய்தபடியே
சவுக்கடி கொடுக்கும் யுவனே 
வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
மறுபடி வருவாய் என்று துடித்தேன்
நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா
(தூது வருமா..)

Kaakha Kaakha - Thoodhu Varuma

காக்க காக்க - உயிரின் உயிரே உயிரின் உயிரே

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்


சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்…நான்…நான்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

இரவின் போர்வை என்னை சுழ்ந்து…
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாரயோ விரல்கள் தாரயோ

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்

Kaakha Kaakha - Uyirin Uyirae

காக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி

என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

ஒன்னே ஒன்னு சொல்லணும்…..
ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நாணம் மாறி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்… நீ சொல்வாயா
யாரை நான் கேட்பேன்… நீயே சொல்வாயா

என்னை கொஞ்சம் மாற்றி…

என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை
இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கிள்ளி கொண்டு
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை

நீ கிள்ளும் பூக்களை… நான் சூடி கொள்ளவே
என் இன்றை எண்ணம் இன்றே வந்தாசே
ஆனாலும் நேரிலே… எப்போதும் போலவே
இயல்பாக பேசி போவது என்றாச்சே
என்னை கொஞ்சம் மாற்றி… என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
ஒரு சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே

என்னை இங்கே வர செய்தாய்
என்னனவோ பேச செய்தாய்
புன்னகைகள் பூக்க செய்தாய் இன்னும் என்ன
அருகினில் அமர்ந்து என்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துரு துரு பார்வைக்கும் தான் அர்த்தம் என்ன? என்ன?

என் பார்வை புதுசு தான்
என் பேச்சும் புதுசு தான்
உன்னாலே நானும் மாறிபோனேனே
கூட்டத்தில் என்னை தான்
உன் கண்கள் தேடனும்

என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே

என்னை கொஞ்சம் மாற்றி…

என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நாணம் மாறி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்… நீ சொல்வாயா
யாரை நான் கேட்பேன்… நீயே சொல்வாயா
நீயே சொல்வாயா நீயே சொல்வா…யா…
நீயே சொல்வாயா

Kaakha Kaakha - Ennai Konjam

காக்க காக்க - ஒன்றா ரெண்டா ஆசைகள்

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் ஆ… நான் கண்ட ஆ…
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் ஆ… பல கதைகள் ஆ…
பேசிடலாம் கலாபக்காதலா

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா

பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய் பார்த்து தான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில்… எனது கனவினை…
காண போகிறேன்…

ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா

சந்தியாக் கால மேகங்கள்
உன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளி வழிய
நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே… வானைத் தாண்டுதே…
சாகத் தோன்றுதே…

அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் ஆ… நான் கண்ட ஆ…
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் ஆ… பல கதைகள் ஆ…
பேசிடலாம் கலாபக்காதலா
கலாபக்காதலா

Kaakha Kaakha - Ondra Renda

காக்க காக்க - ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி

She is a fantasy shanana nana oh oh
Sweet as a harmony shanana nana oh oh
No no no she is a mystery shanana nana oh oh
Fills your heart with ecstasy oh oh yeah yeah hey

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
(ஒரு ஊரில்...)

மரகத சோம்பல் முறிப்பாளே
புல்வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தின் குழியில்
சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தின் குழியில் அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் விதவிதமாய்
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே
(ஒரு ஊரில்...)

மகரந்தம் தாங்கும் மலர்போலே
தனி ஒரு வாசம் அவள்மேலே
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்
அவள் கடந்திடும்போது
தலை அணிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும்போது நிச்சயமாய்
தலை அணிச்சையாய் திரும்பும் அவள்புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே
பல வருட பரிச்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல்முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே

Kaakha Kaakha - Oru Ooril

கண்ட நாள் முதல் - கண்ட நாள் முதலாய்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை 
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை 
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை
கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்

ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ

கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி நறு மலர் சூடி விட்டான்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை
கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்

ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ

கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி நறு மலர் சூடி விட்டான்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

Kanda Naal Mudhal - Kanda Naal Mudhalai

கண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே மேற்கே தான்

லை லை லை லை லாய் லாய் லாய்
லாஹி லாஹி லாஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ?
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ?
லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்

மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ?
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ?
லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்

ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய்த் தோன்றும் அதே நிலா
இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே
மேற்கே மேற்கே தான்...

வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால்
நீதான் என்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
மேற்கே மேற்கே தான் சூரியன்கள்.....

Kanda Naal Mudhal - Merke Merke

Followers