Pages

Search This Blog

Monday, November 21, 2016

தெனாலி - இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

கால்கள் ரெண்டும் தரையிடம்
கோபம் கொண்ட கலவரம்
மிதந்து மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்கோ
பூமியே துரும்புங்கோ
வானமே தூசுங்கோ
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்கோ

ம்ம்.. தண்டணைகள் இனிக்குது
தவறு செய்ய துடிக்குது
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க சிரிக்க தோணுது

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

என்னை என்ன செய்தாய்
என்னவெல்லாம் செய்தாய்
புத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே
டாக்டருக்கு மருமகனா ஆனேனே

உயிரிலே வெள்ளி ஜரிகையும் கலந்து தான் ஓடுதே
உருவமே தங்க சிலையாய் மாறிதான் போனதே

கால் இருந்த இடத்தில் இப்போ
காற்று வந்து குடி இருக்கு
நடக்கவே தோணலைங்க
மிதக்கத்தான் தோணுதுங்க

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

அடிக்கடி காணும் ரகசிய கனவை
அம்பலமாக்கும் நாள் வர வேண்டும்
சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் ஓஹோ
அந்த நாள் வந்ததே வந்ததே

வானவில்லை காணவில்லை
விடுமுறையில் இங்கே வந்துட்டதே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
செல்ல கொஞ்சி நீங்க அழைக்கும்
நாய்க்குட்டி ஆனேனுங்க

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

Thenali - Injerungo Injerungo

தெனாலி - என்ன சொல்லி என்னைச் சொல்ல

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல ஹ்ஹ
காதல் என்னைக் கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
ஸ்வாசமே ஸ்வாசமே

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஸ்வாசமே ஸ்வாசமே
ஸ்வாசமே ஸ்வாசமே

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல

வாசமே வாசமே
வாசமே வாசமே

என்ன் சொல்லி என்னைச் சொல்லு
கண்கள் ரெண்டில் கண்கள் செல்லு
சிறகுகள் முளைக்குது மனசுக்குள் மெல்ல

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்

ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்
இயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை
செயற்கைக் கோளாக உன்னைச் சுற்றச் செய்தாய்
அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்
அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்

ஸ்வாசமே ஸ்வாசமே

இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திடச் செய்தாய்
நதிகளில்லாத அர(பு)தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
எனக்காக நீ கிடைத்தாய் விடிந்துவிட்டேனே

வாசமே வாசமே

என்ன சொல்லி ஹ்ஹ்ஹ
என்ன சொல்லி என்னைச் சொல்லு
காதல் என்னைக் கையால் தள்ள ஹ்ஹ்ஹ

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஸ்வாசமே ஸ்வாசமே
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா... வாசமே..

Thenali - Swasame Swasame

தெனாலி - ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹச்..
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா? ஹச்..

ஆலங்கட்டி  மழை  தாலாட்ட  வந்தாச்சா? 
து  விட்ட  மனசு  பழம்  விட்டு  சேர்ந்தாச்சா? ஹாச்!
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா?
சின்ன சின்ன சண்டை சமாதனமாச்சா? ஹச்

இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சா?
என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சா?

ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா

தண்ணின்னா  தகதிகு  தண்ணின்னா  
தகதிகு தண்ணின்னா  தானாதன்னா
தண்ணின்னா  தகதிகு  தண்ணின்னா 
 தகதிகு தண்ணின்னா  தானாதன்னா
ஹோ..ஒ .....ஹோ..ஒ

குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம்
கல் ஒன்று விழுவதால் கலையலாமா?
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பென்னும் உளி பட்டால் பாறை சிலை ஆறுமே

பித்து குழலுக்கு தேங்காய் பூவ போல
ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது
சொந்தத்தை தினம் சந்திக்க
அவர் நிழல் கூட ஏங்குது

ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா
(ஆலங்கட்டி....)

ஆற்றோர நாணல் அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்
பனையில பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க
ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல்
ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே
உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே
அனைவரும் இங்கு நடந்திடும் போது
ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன
கவிதை போல் உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை ஆகலாமோ

ஆலங்கட்டி  மழை  தாலாட்ட  வந்தாச்சா? 
து  விட்ட  மனசு  பழம்  விட்டு  சேர்ந்தாச்சா

(ஐயோடா..)

Thenali - Alangatti Mazhai

ஜானி - செனோ ரீட்டா ஐ லவ் யூ

செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது

செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஹே ஹே ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல
ஏ ஹே ஹே
எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சைக் கில்லுதே
அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்

செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது

பூமெத்தை போடுகிற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகிற பூவை எண்ணங்கள்
ஆ ஆ ஹே ஹே பூமெத்தை போடுகிற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகிற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள் துள்ளாதோ எண்ணங்கள்
ஏ ஹே ஹே
வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம்
கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்

செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது

செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

Johnny - Senorita I Love You

ஜானி - ஆசைய காத்துல தூது விட்டு

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு

வாசம் பூவாசம் வாலிப காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிகை பூ மனம் வீசும்
நேசத்துல வந்த வாசத்துல
நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்
சொந்தம் தேடுது மேடையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு

தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது நானு
மானு பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடி வர உன்னை தேடி வர
தாழம் பூவுல தாவுர காத்துல மோகம் ஏறுது ஆசையில
பாக்கும் போதுல ஏக்கம் தீரல தேகம் வாடுது பேசையில

ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு
குயில் கேட்குது பாட்டை நின்னு

Johnny - Asaiya Kathula

ஜானி - என் வானிலே ஒரே வெண்ணிலா

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதைத் தாரகை
ஊர்வலம்...

(என் வானிலே)

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா...ஆஆஆஆ

(என் வானிலே)

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவோ

(என் வானிலே)

Johnny - En Vaanilae

ஜானி - ஒரு இனிய மனது இசையை அணைத்துச்

ஒரு இனிய மனது 
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் 
அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது 
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

ஜீவனானது இசை நாதமேன்பது 
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது 
இசை என்றானது
ஆஹா...எண்ணத்தின் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள் 
இணைந்தோடுது இசை பாடுது ....

ஒரு இனிய மனது 
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே 
மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே 
அனலின் தாகமே
ஆஹா..பருவ வயதின் கனவிலே 
பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்

ஒரு இனிய மனது 
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் 
அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய மனது 
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

Johnny - Oru Iniya Manadhu

Followers