Pages

Search This Blog

Showing posts with label Viduthalai. Show all posts
Showing posts with label Viduthalai. Show all posts

Tuesday, May 9, 2023

விடுதலை - ஒன்னோட நடந்தா

 ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே


ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே


பெண்ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


ஆண்ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


பெண்சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குதே


ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது


ஆண்முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே


ஆண்நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்

பெண்கல்லான காடு
ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


ஆண்பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பெண்ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராராரி ராரிராரோ
ஆராரிராராரி ராரிராரோ


பெண்ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே


ஆண்நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது


ஆண்நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்


பெண்கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


ஆண்ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


பெண்சொல்லாத மாயங்கள்
உன்னால் நடக்குதே


ஆண்ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே





Viduthalai  - Unnoda Nadantha

விடுதலை - வழி நெடுக காட்டுமல்லி

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…

யாரும் அத பாக்கலியே…
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…

பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…
பூக்குற நேரம் தெரியாது…
காத்திருப்பேன் நான் சலிக்காது…
பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
வழி நெடுக காட்டுமல்லி

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை..
இது நிசமா கனவு இல்ல…
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல…
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…
ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள…
போகுற வருகிற நினைவுகளே…
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்…
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…
ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர…
காட்டுமல்லியில அரும்பெடுக்க…
பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
கண்பார்க்கும் கவனமில்லை…
ஆண் : காடே மணக்குது வாசத்துல…
என்னோட கலக்குது நேசத்துல…

பெண் : கிட்ட வரும் நேரத்துல…
எட்டி போற தூரத்துல…
ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள…
உன்னவிட்டு போவதில்ல…

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில…
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…
ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது…
நெசமா யாருக்கும் தெரியாது…
பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்…
காட்டுல வீசிடும் காத்தறியும்…
வழி நெடுக காட்டுமல்லி…
கண் பார்த்தும் கவனமில்லை…
ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…
வருமா வருமா வீட்டுக்குள்ள…
பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா…
என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
ஆண் & பெண் : வழி நெடுக காட்டுமல்லி…




Viduthalai - Vali Neduka Kaattumalli

Followers