Pages

Search This Blog

Wednesday, January 30, 2019

கோரிப்பாளையம் - என்ன இந்த மாற்றமோ எம்மனசு வலிக்குதே

என்ன இந்த மாற்றமோ எம்மனசு வலிக்குதே 
கண்ணுரெண்டும் காந்தமோ 
என்னைக்கட்டி இழுக்குதே 
உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே 
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை நான் சேர்ப்பேனே 
நீ வந்ததும் என்னானது  
என் வாழ்க்கையே வேறானதோ   (என்ன)

ச்சின்னச்சின்னப் புன்னகையில் என்னைப்பரித்தாய் 
வண்ண வண்ண கனவுகள் கண்ணில் கொடுத்தாய் 
சிறிய இதயத்தில் பெரிய காதலை தந்தாயடி என் அன்பே 

மெல்ல மெல்ல மனசுக்குள் இடம் பிடித்தாய் 
மின் மினிக்கும் மின்னலைப்போல் ஒளிக்கொடுத்தாய் 
உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில்  
வந்தாயடா என் அன்பே  

ஒரு பார்வைப் பார்க்கும்போதிலே 
எந்தன் தாகம் வானம் ஏறுதே 
மறு பாதிப்பார்க்கும் போதிலே 
எந்தன் ஜென்ம சாபம் தீருமோ 

என் கால் கொலுசில் உன் பேரைச்சொல்ல  
நான் கேட்டேனே 
நீ வந்ததும் என்னானது  
என் வாழ்க்கையே வேறானதோ   (என்ன)

சுற்றி உந்தன் முகம் அன்றி ஏதும் இல்லையே 
மற்றபடி வேற ஒன்னும் தொல்லை இல்லையே 
உயிரை எடுக்கிறாய் திரும்பக்கொடுக்கிறாய் 
திண்டாடுதே என் நெஞ்சம் 

நெற்றிப்பொட்டில் நேற்றுவரைக் காய்ச்சல் இல்லையே 
நட்சத்திரம் பார்த்து நான் பேசவில்லையே 
உயிரைக்குடிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய் 
கொண்டாடுதே என் நெஞ்சம் 

உனைப்பார்த்துக் கொஞ்சிப்பேசத்தான் 
எந்தன் ஆசைத்தாவி ஓடுதே 
உனைப்பார்த்துப் பேசும் நேரத்தில் 
எந்தன் வார்த்தை ஊமையாகுதே 

கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா 
உன் இதழ்கள் சொல்லும்   (நீ வந்ததும்



Goripalayam - Enna indha maatramo

Followers