Pages

Search This Blog

Friday, April 6, 2018

தென்றலே என்னைத்தொடு - தென்றல் வந்து என்னைத்தொடும்

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில்…சாயும்…போது

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம்…ஊறும்…நேரம்

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்



Thendrale Ennai Thodu - Thendral Vandhu Ennai Thodum

Followers