Pages

Search This Blog

Tuesday, December 27, 2016

நிலாவே வா - கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா

அவ உச்சி பாற ஓரமா  ஓரமா ஓரமா

நான் தண்ணிக்குள்ளே தூரமா  தூரமா தூரமா

நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி
உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா
நீயும் வந்து சேரும் யோகம் வருமா

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா

என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு
நாக்கு மட்டும் வத்தி விட்டதே

ஓடம்பத்தான் கட்டி வசேன் உயிர் கயிரில்
இப்ப ரொம்ப இத்து விட்டதே

என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்
நெஞ்சு வேகாது கண்ணம்மா

உன்ன காணாம உயிர் சேராம
என் கண்ணீரு தீருமா

கண்ணீரு கடலுக்குள் விழுந்தால் கடலுக்கு சொந்தமடி

கண்ணீரு முத்தா விளஞ்சா எடுத்துக்க நல்லபடி

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா

தூதுவிட்ட அலை அட எந்த அலையோ
என்ன வந்து சேரலையே

தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே

வலி வந்தாலும் மொழி சொல்லாம
நான் நின்னேனே ஊமையா

 நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான்
இந்த கண்ணீரு தேவையா

கடல் தண்ணீர் அடிக்கிற அலையில கரையே மூழ்கிடுமோ
உன் கண்ணீர் அடிக்கிற அலையில கடலே மூழ்கிடுமோ

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா

அவ உச்சி பாற ஓரமா  ஓரமா ஓரமா

நான் தண்ணிக்குள்ளே தூரமா  தூரமா தூரமா

 நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி
உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா
நீயும் வந்து சேரும் யோகம் வருமா

Nilaave Vaa - Kadalamma Kadalamma

Followers