Pages

Search This Blog

Thursday, November 17, 2016

கிடாரி - தலகாலு புரியலையே -

என் கண்ணெல்லாம்
உன்னை தேடி பக்க
என் நெனப்பெல்லாம்
உன்னை பத்தி கேக்க
வந்தேன் எதிர்பாத்து வந்தேனே
நின்னேன் எதிர்காத்தில் நின்னேன்

தலகாலு புரியலையே
தரைமேல நிக்கலையே
ஒரு நாளும் இதுபோல
மனசெல்லாம் பூக்களையே
வெள்ளாட்டு மணியை போல
நெஞ்சோரம் பேசி போரே
வெண்காடு கோரை போல
காய வைக்கிறியே

கிடாரியே உன் போல
ஊருக்குள் யாரும் இல்லை
கிடாரியே உன்னால
யாருக்கும் தூக்கம் இல்லை

கிடாரியே உன் போல
ஊருக்குள் யாரும் இல்லை
கிடாரியே உன்னால
யாருக்கும் தூக்கம் இல்லை

மனச மனசால
அலச நெனைச்சேனே
உன் மீசை நுனியினிலே
நான் தூங்க தவிக்குரேன்
உசுர உசுராலே
உரச நெனைச்சேனே
உன் நெருப்பு கண்ணுல
நான் உருக துடிக்குறான்
ஊடு பாயும் விரல்கள்
குத்தீட்டி தானுங்க
இன்னும் என்ன சொல்ல
பதாட்டி கேளுங்க

தலகாலு புரியலையே
தரைமேல நிக்கலையே
ஒரு நாளும் இதுபோல
மனசெல்லாம் பூக்களையே

கோபம் காட்டாம
பயத்தை தருவானே
இவன் போற போக்கை பாத்து
அட ஊரே நிக்குது வேத்து

பூவா தலையானு
விழுந்த தெரிஞ்சிக்கலாம்
இவன் முடிவை சொல்ல யாரும்
முடியாதே எப்போதும்

பாசம் ரோசம் ரெண்டும்
உள்ளாரா வாழுதே
பார்வை பேசும் போதே
பயம் கூடுதே

கிடாரியே உன் போல
ஊருக்குள் யாரும் இல்லை
கிடாரியே உன்னால
யாருக்கும் தூக்கம் இல்லை

கிடாரியே உன் போல
ஊருக்குள் யாரும் இல்லை
கிடாரியே உன்னால

Kidaari - Thalakaalu Puriyalaiyae

Followers