Pages

Search This Blog

Monday, November 21, 2016

அள்ளி தந்த வானம் - கண்ணாலே மியா மியா

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா… 

காதலும் சொல்லவும் அய்யா என் கவி கண்கள் அய்யா 
எங்குமே உந்தன் கையா இதனை மூட தேவையா 
கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா… 

பாதிக்கண்ணால் மூடும் மீதிக் கண்கள் தேடும் 
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ 

பார்வை தப்பும் நேரம் நாணம் கப்பல் ஏறும் 
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ 

முதல் முதலில் உன் ஹோய் நேரம் பேரின்பமாய் 

உயிரினில் நுழையும் ஹோய் நேரம் இதுதான் 

ஹேய் கொஞ்சம் கம்மாயிரு பக்கம் வந்தால் வம்பாயிடும் 

இமை ஒட்டி கிள்ளும் இதழ் திட்டி தள்ளும் 

விரல் கட்டி கொள்ளும் ஒரே நிழல் நெஞ்சம் 

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா… 

தீயை தின்னும் நேரம் தேகம் எங்கும் ஈரம் 
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ 

காமன் கட்டில் ஆடும் மூச்சின் வெப்பம் கூடும் 
ஆடை பற்றிக் கொள்ள சுடுமல்லோ 

தலையணை முழுதும் ஹோய் கூந்தல் அலைதான் 

இருபது விரலும் ஹோய் தீயின் இணைதான் 

ஹேய் என்னை தீண்டாதிரு 
தொட்டால் என்னை தள்ளாதிரு தள்ளாதிரு 

கண்கள் ரெண்டும் பள்ளம் வேர்வை கொட்டி வெல்லும் 

கட்டில் வெப்பம் செல்லும் ஒரே நிழல் நெஞ்சம் 

கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா 
உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா…

Alli Thandha Vaanam - Kannale Miya Miya

Followers