Pages

Search This Blog

Wednesday, November 23, 2016

கண்ட நாள் முதல் - உன் பனித்துளி பனித்துளி பனித்துளி

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு
வாடிவுட்ம் வாசமல்லி
சந்தனத்தை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது
எப்போவென்னு மாமியாரு 
கேட்கும் முன்னே
அரை டஜன் பெத்து கொடுங்க

தக தக தக தக
தங்க சில தவிக்குது
வெட்கத்திலே போதும் 
அதை விட்டுவிடுங்க

ஆராரிராரோ ஆராரிரரோ
நாளைக்கின்னு தேவைப்படும்
தாளத்துல 
ஒன்னு ரெண்டு கத்துக்கொடுங்க

உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பறித்து
வெளிச்சம் தரும் இரவு
காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே
(உன் பனித்துளி..)
(கரு கரு..)

விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள்
என்னில் அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்
ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்
ஓ.. உன்னை நானும் என்னை நீயும் 
எங்கே என்று தேடினோம்
நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குள்ளே பேசலானோம்
பேசும் போதே பேசும் போதே
மௌனம் ஆனோம்
(உன் பனித்துளி..)

முகத்திரை குள்ளே நின்று
கண்ணாம்பூச்சி ஆடினாய்
பொய்யாய் ஒரு மாலை கட்டி
பூவை செய்து சூடினாய்
நிழல்களில் உள்ளே உள்ள
நிஜங்களை தேடினேன்
நீயாய் அதை சொல்வாய் என
நித்தமும் நான் வாடினேன்
சொல்ல நினைத்தேன்
ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும்
எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாருமினி
தேவை இல்லை
(உன் பனித்துளி...)

Kanda Naal Mudhal - Pani Thuli

Followers