Pages

Search This Blog

Wednesday, January 29, 2014

ஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது கடவுள் அல்லவா

ஆண் :
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா

பெண் :
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா

ஆண் :
செல்ல பொய்களும் சுவர்கள் அல்லவா
இங்கு விழியின் வழிகளும் வரங்கள் அல்லவா

பெண் :
வரங்கள் என்பது கலைகள் அல்லவா
அதில் விழுந்து எழுவது துயரம் அல்லவா

ஆண் :
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா

பெண் :
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வழிகள் அல்லவா

ஆண் :
கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகுந்தம்
உன்னை பார்க்கும் முன்பு நானே வெட்ட வெளியிலே திரிந்தேன்
உந்தன் அருகில் வந்து தான் என் வேடந்தாங்கலை உணர்தேன்
உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே
நீ இன்றி நானே வெறும் கூடு தானே
தாயோடு உணர்கின்ற வெக்கத்தை நீயே தந்தாய்

ஆண் :
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா

பெண் :
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா

ஆண் :
காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொளுத்தும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
எனை விலகி நீயும் பிரிந்தால் நேரம் பாரமாய் கணக்கும்
உன் அருகில் இருந்தால் என்ன ஏணி வேண்டும்
உலகம் கையில் வந்ததா எண்ணம் ஒன்று தோண்டும்
தாயோடு உணர்கின்ற வெட்கத்தை நீயே தந்தாய்

பெண் :
காதல் வருவது புரிவதில்லையே
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே
பூக்கள் பூப்பதே தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே

Oru Kalluriyin Kathai - Kadhal Enbathu

Followers