Pages

Search This Blog

Thursday, December 5, 2013

தித்திக்குதே - ஒரு நிமிடமா ஒரு நிமிடமா

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒருநிமிடமா தவறிவிட்டேன்
ஒருஜென்மமே ஒரு ஜென்மமே ஒருஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே

பள்ளித்தோழியே நீ வந்து போனாயா
பாவாடைப்பூவே நீ வந்து போனாயா
காற்றேல்லாம் உன்வாசம் வந்து போனாயா
கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா
நதியெல்லாம் உன் கொழுசு வந்து போனாயா

(ஒரு நிமிடமா)

நிலா வந்து போனதற்கு வான்வெளியில் சாட்சியில்லை
ஆனாலும் பூமியிலே அல்லியெல்லாம் சாட்சிசொல்லும்
நீ வந்து போனதற்கு சாட்சி சொல்ல யாருமில்லை
ஆனாலும் மலையெல்லாம் அசையாமல் சாட்சி சொல்லும்
இளம்பிறையாகப்பார்த்தவளே இப்போதெப்படி இருப்பாயோ
அங்கம் கொழித்து திமிறும் அழகில் அடையாளங்கள் தொலைத்தாயோ
உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும்
உறைந்துவிடாமல் இருப்பாயோ                                  

(அன்பே அன்பே எங்கே)

பூப்போல மலர்ந்துவிட்டேன் வாழ்வில் ஏதும் மாசமில்லை
கண்ணா உன்னை கண்டுகொண்டால் கண்கள்மீண்டு தேவையில்லை
மறுமுறை என்னைப் பார்க்கையிலே மார்பில் புதைந்து அழுவயோ
வெட்கம்தடவிய புன்னகையாலே விவகாரங்கள் செய்வாயோ
இலையில் சிக்கிய மழையைப்போலே
என்னைத்தொடாமல் எங்கேதவிப்பாயோ

(அன்பே அன்பே எங்கே)

Thithikudhe - Oru Nimidamaa

Followers