Pages

Search This Blog

Tuesday, December 17, 2013

இவன் வேற மாதிரி - தனிமையிலே என் இதயம்

தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
என் அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவையில்லை

தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே

ஓ வான் நிலவு ஏளனமாய்
எனைப் பார்த்து சிரிக்கிறதே
ஊதுபத்தி போல் எனது
உயரம் இங்கே குறைகிறதே
ஆறுகளாய் விழி கலங்கும்
ஆறுதலாய் நீ இல்லையே
வேறெதுவும் புரியாமல்
வேர் வரையில் உன் கனவே
என்னவளே என் உலகம் உரையுதே
கண்களிலே என் கனவாய் நிறையுதே

பேச்சிருந்தும் மூச்சிருந்தும்
உயிரை மட்டும் காணவில்லை
நீ நடந்த சாலைகளில்
நடந்திடவே முடியவில்லை
ஏழு கடல் ஏழு மலை
தாண்டி உனைத் தேடிடுவேன்
காற்றில் எல்லாம் உன் பெயரை
எழுதி வைத்தே காத்திருப்பேன்
என்னுயிரே என் இதயம் துடிக்குதே
உயிர் விடுவேன் நீ பிறந்தால் நொடியிலே
 
Ivan Veramathiri - Thanimayile

Followers