Pages

Search This Blog

Wednesday, November 6, 2013

புது புது அர்த்தங்கள் - குருவாயூரப்பா குருவாயூரப்பா

குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

(குருவாயூரப்பா)

தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் நாந்தானே அதைக் கேட்டிருந்தேன்
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான் அலைபாயும் என் ஜீவந்தான்
மாது உன் மீது எப்போது என் மோகம் தீராதோ சொல் பூங்கொடியே

(குருவாயூரப்பா)

ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேலே ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு மானே வா உனை யார் தடுக்க
பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்
வா வா என் தேவா செம்பூவா என் தேகம் சேராதோ உன் கைகளிலே

(குருவாயூரப்பா

Pudhu Pudhu Arthangal - Guruvayurappa Guruvayurappa

Followers