Pages

Search This Blog

Tuesday, November 5, 2013

சின்ன தம்பி - உச்சந்தல உச்சியில

உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு

கண்மாயி நெறஞ்சாலும் அதை பாடுவேன்
நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும்
அதை பாடுவேன்
புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன்
பச்ச பனி மேலே பனி தூங்கும்
அதை பாடுவேன்
செவ்வானத்த பார்த்தா சின்ன சிட்டுகள பார்த்தா
செம்மறிய பார்த்தா சிறு சித்தெறும்ப பார்த்தா
என்னை கேட்காமலே பொங்கிவரும்
கற்பனைதான் பூத்து வரும் பாட்டு தமிழ் பாட்டு

தெம்மாங்கு கிளிகண்ணி தேன் சிந்துதான் இன்னும்
தாலாட்டு தனிப்பாட்டு எசப்பாட்டுதான்
என் பாட்டு இது போல பல மாதிரி
சொன்ன எடுப்பேனே படிப்பேனே குயில் மாதிரி
தாயாலதான் வந்தேன் இங்கு பாட்டாலதான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கே வல்லே சின்ன தம்பி
இங்கு நான் இருக்கும் காலம் மட்டும்
கேட்டிருக்கும் திக்கு எட்டும் பாட்டு எந்தன் பாட்டு

Chinna thambi - Uchanthala uchiyila

Followers