Pages

Search This Blog

Monday, November 4, 2013

ராதா திலகம் - பசுமை நிறைந்த நினைவுகளே

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

பசுமை நிறைந்த ....

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே (2)
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே (2)
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே (2)
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
நாமே வாழ்ந்து வந்தோமே

பசுமை நிறைந்த ....

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ (2)
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ (2)
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ (2)
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
என்றும் மயங்கி நிற்போமோ

பசுமை நிறைந்த நினைவுகளே ....

Ratha thilagam - Pasumai niraintha ninaivugale

Followers