Pages

Search This Blog

Thursday, October 10, 2013

அயன் - நெஞ்சே நெஞ்சே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே ..
நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே....
அன்பே அன்பே நான் இங்கே..
தேக‌ம் இங்கே.. என் ஜீவ‌ன் எங்கே....

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்..
வான் ம‌ழையாக‌ என்னைத் தேடி ம‌ண்ணில் வந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சேர்கிறாய்...?

ஹோ..நெஞ்சே நெஞ்சே நீ எங்கே..?
நானும் அங்கே.. என் வாழ்வும் அங்கே...

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் இம்மண்ணும் பொய்யாக‌க்க‌ண்டேனே..

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொ‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சுப்ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்..

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே..?
நானும் அங்கே.. என் வாழ்வும் அங்கே..
அன்பே அன்பே நான் இங்கே..
தேக‌ம் இங்கே.. என் ஜீவ‌ன் எங்கே..?

க‌ள்வா ஏ க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே

காத‌ல் மெய்க்காத‌ல் அது பட்டுப் போகாதே
காற்று நம் பூமி தனை விட்டுப் போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌க்கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த்தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும் ந‌ம் காத‌ல் மாறாதே..

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே..?
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே..

அன்பே அன்பே நான் இங்கே..
தேக‌ம் இங்கே.. என் ஜீவ‌ன் எங்கே..?

என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனைத்தேடி ம‌ண்ணில் வந்தாய்

உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் மழையை ஏன் வைகிறாய்...?

Ayan - Nenje Nenje

Followers