Pages

Search This Blog

Wednesday, October 23, 2013

காவலன் - யாரது யாரது

யாரது யாரது யாரது யாரது
யாரது யாரது யாரது யாரது
சொல்லாமல் என் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் என்கண்ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது
தெளிவாகக் குழம்ப வைத்தது

யாரது யாரது யாரது யாரது
யாரது யாரது யாரது யாரது

என்னிலொரு சடுகுடுசடுகுடு
காலை மாலை நடக்கிறதே

கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போது தொடர்கிறதே
என்னிலொரு சடுகுடுசடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போது தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினைத் தருவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழலெனத் தொடர்வது புரிகிறதே

இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே

யாரது யாரது யாரது யாரது
யாரது யாரது யாரது யாரது

உச்சந்தலை நடுவினில் அவளொரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சைராச்சியம்தொடங்குகிறாள்
அவளிவளென எவள் எவளென
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள்

யாரது யாரது யாரது யாரது
யாரது யாரது யாரது யாரது
சொல்லாமல் என் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் என் கண்ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது
தெளிவாகக் குழம்ப வைத்தது

Kaavalan - Yaradu

Followers