Pages

Search This Blog

Sunday, October 13, 2013

துள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடி தேடி தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

கண் இல்லை என்றாலோ நிறம் பார்க்கமுடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது
குயில் இசை போதுமே அட குயில் முகம் தேவையா?
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா?
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்திவிடும்
கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

உயிரொன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிரென்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது
ரகசியம் காண்பதே நம் அவசியம் ஆனது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடி தேடி தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

Thulladha Manamum Thullum - Innisai Paadivarum

Followers