Pages

Search This Blog

Thursday, December 1, 2016

பத்ரி - ஏஞ்சல் வந்தாளே வந்தாளே

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாய் இருந்தேனே
ஹேய் உன் மேனி அழகை ஆராயும் விஞ்ஞானி போல் இந்து ஆனேனே
எல்லாம் சக்சஸ் தான் இனிமேல் கிஸ் கிஸ் தான் வா வா வா
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வா

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் வைத்திருந்த புயல் ஒன்றை சொல்லும்முன் அறிந்தாயே நன்றி உயிரே
உந்தன் மார்பில் படர்ந்து விடவா
உந்தன் உயிரில் உறைந்து விடவா
உறவில் உறவில் இது ஒரு தவம்
நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

Badri - Angel Vandhaaley

பத்ரி - சலாம் மகராசா சலாம் மகராசா

சலாம் மகராசா சலாம் மகராசா
உங்க வயசுக்கு தான் ஆடுறேன்
உங்க கைத்தட்டு தானே என் துட்டு
போடு தில்லானா நான் போடுறேன்
கொஞ்சம் மணம் விட்டு என்ன பாராட்டு
போதும் பம்பரமா நான் சுத்துறேன்

அடி திரனானா அந்த தில்லானா மோகனாம்பாளு நீதானடி
நீ நிமிந்தாலும் கொஞ்சம் குனிஞ்சாலும் நெஞ்சில் வெடிக்குதடி ஊசிவெடி
அடி சுதியேத்து கொஞ்சம் குஷியேத்து
இந்த ஹோட்டலயே வாங்கித்தரேன் உன் கூத்துக்கு

அடி பாப்பா உன்ன பாத்தா கண்ணு கபடி ஆடுது
உன் இடுப்பில் உள்ள மடிப்பு என்ன கசக்கி போடுது

ரொம்ப டீப்பா உங்க பார்வை என்ன ஆழம் பாக்குது
உங்க மூச்சு ஒன்னு சேத்து என்ன சூடு ஏத்துது

ஹே மன்றங்கள் வைக்க நாங்க ரெடி திறப்பு விழாவில் கலந்துக்கடி
அடி பாப்பா உன்ன பாத்தா கண்ணு கபடி ஆடுது
உன் இடுப்பில் உள்ள மடிப்பு என்ன கசக்கி போடுது

Badri - Salaam Maharasha

பத்ரி - என்னோட லைலா வராளே

என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு
எதுக்கு உனக்கு இத்தன லொள்ளு
என் நெஞ்சுல குத்தாதே முள்ளு
காயா பழமா சொல்லு சொல்லு
என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

அட மனச வலையா விரிச்சேன் அந்த மைனா மாட்டலியே
ஒரு மாஞ்சா தடவியும் பாத்தேன் பாத்தேன் டீலே கெடைக்கிலியே
அம்மு இங்கே வருவாளா பதில கேட்டு சொல்லு
அவ இடுப்புல மடிப்புல கலங்குது மனசு குயிக்கா வரச்சொல்லு
Why Doesn't She Talk to Me வா வா சின்னக்கா லவ்வ கொஞ்சம் சொல்லக்கா
Why Doesn't She Walk with Me இவன் தான் உனக்கு பக்கம் கொஞ்சம் வாக்கா

என்னோட லைலா வராளே மெயிலா சிக்னலே கெடைக்கல கெடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

எந்த தேதி சிங்கார சிட்டு என்ன பாத்து தன்னால வருவா
அலுங்கி குலுங்கும் தளதள உடம்ப எப்ப வந்து எங்கிட்ட தருவா
பிகர கொஞ்சம் ஓரம்கட்ட ஷார்டு ரூட்டு இருந்தா சொல்லு
காதல் பண்ணும் பேஜாரை எடுத்து மேடத்த பாத்து மெசேஜு சொல்லு

என் ஹயிட்டு இது போதாதா அட ஏண்டா அலுத்துக்குரா
அட எல்லாம் தெரிஞ்ச ஆளுக்கு முன்ன ரொம்ப அல்டிக்கிரா
வயசு பையன மொறைக்க வேணாம் அட கொஞ்சம் சிரிக்க சொல்லு
அவ ஓரக்கண்ணில் பார்த்தா போதும் லுக்கு குடுக்க சொல்லு
Why Doesn't She Look at Me ஒரு பார்வை பாரடி கண்ணே கண்ணே
Why Doesn't She Care for Me சீ சீ என்று சொன்னா வம்பே
Why Doesn't She Start For Me அவளா வருவா பொறுடா நண்பா
Why Doesn't She Just Love Me போனா போட்டும் லவ் யூ சொல்லுமா
Why Doesn't She Just Love Me பாவம் பொழைக்கட்டும் லவ் யூ சொல்லுமா
Why Doesn't She Just Kiss Me பாடா படுத்துறான் உம்மா குடும்மா
Why Doesn't She Just Love Me கெஞ்சிறான் தலைவன் லவ் யூ சொல்லுமா
Why Doesn't She Just Love Me

Badri - Ennoda Laila

Wednesday, November 30, 2016

இந்திரா - தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

(தொடத்தொட)

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன

(தொடத்தொட)

பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

(தொடத்தொட)

Indira - Thoda Thoda

இந்திரா - ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து

பச்ச பாவக்கா…பளபளங்க…பழனி பச்ச…மினுமினுங்க…
செங்கருட்டி…செவத்தபுள்ள…கின்னாவந்தா…கினுகட்டி…
உடும்பு…துடுப்பு…மகா…சுகா…
பா…பரங்கி…எட்டுமண்…குண்டுமண்

ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க ¦ºளக்கியமா
ஏ அரிசிக்கட ஐய்யாவுப் பொண்ணு ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு ¦ºளக்கியமா

பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா (2)

பட்டணத்து ஸ்டைலக்கண்டா பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது

(ஓடக்கார)

குண்டுப் பொண்ணு கோமலவள்ளி என்னானா என்னானா
ரெட்டப்புள்ள பொறந்ததுமே நூலானா நூலானா
குள்ள வாத்து டீச்சர் கனகா
ஐயோ…பார்வையில பச்ச மொளகா
மேற்படிப்பு படிக்கப் போனா மேற்கொண்டு என்ன ஆனா
மொத்தத்துல மூணு மார்க்கில் ஃபெயிலானா ஃபெயிலானா
ஒல்லிக்குச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா
பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே

(ஏ ஓடக்கார)

அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு
சாதிச் சண்ட கலவரத்துல ரெண்டாச்சு ரெண்டாச்சு
மேலத்தெரு கருப்பையாவும் கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூலையில ஜோடிசேர்ந்த கதையென்னாச்சு
மூத்த பொண்ணு வயசுக்குத்தான் வந்தாச்சு வந்தாச்சு
மத்த கதை எனக்கெதுக்கு எங்குருவி எப்படி இருக்கு
தாவிச்செல்லு குருவி இன்னிக்கு தாவணி போட்டிருக்கு

(ஏ ஓடக்கார)

Indira - Odakaara Maarimuthu

இந்திரா - அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே…வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

Indira - Ini Achcham Achcham

இந்திரா - நிலாக் காய்கிறது நிறம்

நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும்
சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெயில் காயும் காயும் அதில் மாற்றம்
ஏதும் இல்லையே
ஆ…வானும் மன்னும் நம்மை வாழச் சொல்லும் அந்த
வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக்
கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக்
கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்கையே சீதனம் உங்கள் தேவையைத்
தேடுங்கள்
நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது யாரும்
ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும்
சுகிக்கவில்லையே
சின்ன கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

Indira - Nilla kaaikirathu

Followers